கடலில் மிதந்து வந்த.. 15 ஆயிரம் ஆடுகள்.. அதிர்ந்து போன மக்கள்.. உலகை உலுக்கிய கொடூர சம்பவம்
கார்டோம்: சூடான் கடல் பகுதியில் 15 ஆயிரம் ஆடுகள் பிணமாக மிதந்தபடி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சூடானில் இருந்து அவ்வப்போது ஆடுகள் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். உணவு தேவைக்காகவும், தோல் தேவைக்காகவும் ஆடுகள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
சூடான் வறுமையில் உள்ள நிலையில், அவர்களின் வருமானத்தில் இந்த ஆடுகள் ஏற்றுமதி முக்கியமான பங்கு வகித்து வருகிறது.

ஆடுகள் ஏற்றுமதி
இந்த நிலையில் நேற்று முதல் நாள் சூடானில் சிவப்பு கடல் துறைமுகத்தில் இருந்து ஆடுகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. சவுதி நோக்கி இந்த ஆடுகள் கப்பலில் அனுப்பப்பட்டன. மொத்தம் 15800 ஆடுகள் ஒரே ராட்சச கப்பலில் கூண்டுகளில் அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. அந்த கப்பலின் பெயர் Badr 1 ஆகும். கப்பல் கடலுக்கு சென்று சில மணி நேரங்களில், கப்பலில் ஏற்பட்ட துளை காரணமாக, தண்ணீர் உள்ளே புகுந்து கப்பல் மூழ்கி உள்ளது.

மூழ்கியது
கப்பல் கடலில் மூழ்கியதும், கூண்டுகளில் இருந்த ஆடுகளும் தண்ணீரில் மூழ்கின. முடிந்த வரை கூண்டுகளை திறக்க கப்பலில் இருந்தவர்கள் முயன்று உள்ளனர். ஆனால் 700 ஆடுகள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டன. மற்ற ஆடுகள் எல்லாம் நீரில் மூழ்கி இறந்தன. பலியான 15000 ஆடுகள் பிணமாக நீரில் மிதந்து வந்த காட்சி அந்நாட்டு மக்களை உலுக்கியது. அங்கு கடந்த 2 நாட்களாக ஆடுகள் ஒவ்வொன்றாக சடலமாக கரை ஒதுங்கி வருகின்றன.

அதிர்ச்சி சம்பவம்
உயிருடன் மீட்கப்பட்ட 700 ஆடுகளும் அதிக தண்ணீர் குடித்துள்ளன. சில ஆடுகள் மோசமான உடல்நிலையில் உள்ளன. இந்த ஆடுகள் நீண்ட காலம் உயிர் வாழாது. அதோடு இதை யாரும் வாங்க முன் வர மாட்டார்கள் என்றும் ஆட்டை ஏற்றுமதி செய்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு மக்கள் இடையே இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணை
ஆடுகள் பலியான சம்பவம், காரணமாக அங்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். ஆடுகளை பாதுகாப்பற்ற முறையில் கொண்டு சென்றுள்ளனர். பாதுகாப்பற்ற கப்பலில் ஆடுகளை கொண்டு சென்றுள்ளனர் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். ஆடுகள் இப்படி பலியான சம்பவம் காரணமாக, அந்த கடல் பகுதி மாசுபட்டு உள்ளதாகவும், சுற்றுசூழல் ரீதியான பாதிப்பை இது ஏற்படுத்தும் என்றும் கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications