பாலகோட்டில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர்- பாகிஸ்தான் மாஜி அதிகாரி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் முன்னாள் தூதரக அதிகாரி ஆகா ஹிலாலி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பேட்டியளித்தவர் சாமானியர் கிடையாது. அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் என்ற பதவி உட்பட பல பதவிகளை வகித்தவர்தான், ஆகா ஹிலாலி.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள், வீர மரணமடைந்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இதன் பின்னணியில் இருப்பதை கண்டறிந்த இந்திய உளவு அமைப்புகள் பதிலடி தர தயாராகின.
இதன் ஒரு பகுதியாக, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம் அமைந்துள்ள பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் பிப்ரவரி மாதம் 26ம் தேதி, அதிகாலையில் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தின.
தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்பட்டதாகவும், பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய தரப்பில் கூறப்பட்டாலும் பாகிஸ்தான் அதை மறுத்து வந்தது.
தங்கள் மண்ணில் தீவிரவாத முகாம்கள் செயல்படவில்லை என்று பாகிஸ்தான் கூறிவந்த நிலையில், இந்திய தாக்குதலில், 300 பேர் கொல்லப்பட்டதாக ஆகா ஹிலாலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த உருது மொழி டிவி சேனல் ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
தேன்கூடு ஈரான்.. பாகிஸ்தான் செய்ய போகும் பெரிய உதவி.. இஸ்லாமாபாத் வரும் அமெரிக்க 'மாப்பிள்ளை' -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி









Click it and Unblock the Notifications