பாலகோட்டில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர்- பாகிஸ்தான் மாஜி அதிகாரி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் முன்னாள் தூதரக அதிகாரி ஆகா ஹிலாலி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பேட்டியளித்தவர் சாமானியர் கிடையாது. அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் என்ற பதவி உட்பட பல பதவிகளை வகித்தவர்தான், ஆகா ஹிலாலி.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள், வீர மரணமடைந்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இதன் பின்னணியில் இருப்பதை கண்டறிந்த இந்திய உளவு அமைப்புகள் பதிலடி தர தயாராகின.
இதன் ஒரு பகுதியாக, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம் அமைந்துள்ள பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் பிப்ரவரி மாதம் 26ம் தேதி, அதிகாலையில் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தின.
தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்பட்டதாகவும், பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய தரப்பில் கூறப்பட்டாலும் பாகிஸ்தான் அதை மறுத்து வந்தது.
தங்கள் மண்ணில் தீவிரவாத முகாம்கள் செயல்படவில்லை என்று பாகிஸ்தான் கூறிவந்த நிலையில், இந்திய தாக்குதலில், 300 பேர் கொல்லப்பட்டதாக ஆகா ஹிலாலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த உருது மொழி டிவி சேனல் ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications