இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருக்கும் 300 தீவிரவாதிகள்... பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் முகாம்கள
Subscribe to Oneindia Tamil
டெல்லி : பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. மற்றும் அந்நாட்டு ராணுவத்தின் உதவியுடன் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக உள்ளதாக மத்திய அரசு பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.
17 இடங்களில் முகாமிட்டுள்ள இந்த தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹமது, ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள் முகாமிட்டுள்ள 17 இடங்களும் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த 17 முகாம்களும் பாகிஸ்தான் ராணுவத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த முகாம்களில் உள்ள தீவிரவாதிகள், துப்பாக்கிகள், ஆயுதங்களுடன் ஊடுருவ தயாராக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications