For Daily Alerts
Just In
எகிப்தில் மர்ம நபர்கள் சுட்டு, 4 போலீசார் சாவு! தீவிரவாதிகள் கைவரிசையா?
கெய்ரோ: சோதனை சாவடியில் பணியில் இருந்த 4 போலீசார், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான சம்பவம் எகிப்து நாட்டில் நடந்துள்ளது.
எகிப்து நாட்டின், தெற்கு ஜிசா பகுதியின் சகாரா நெடுஞ்சாலை பகுதியில், போலீசார் இன்று வழக்கம்போல, செக்போஸ்ட்டில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல், திடீரென, போலீசார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த எதிர்பாராத தாக்குதலை சமாளித்து போலீசார் திருப்பி தாக்க தொடங்கியதும், அந்த கும்பல் தப்பியோடிவிட்டது.
இந்த தாக்குதலில், 4 போலீசார் பலியாகினர். சமீபகாலமாக போலீசார், ராணுவத்தினர், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடந்துவருவது எகிப்தில் அதிகரித்துள்ளது. இதுவரை தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Comments
English summary
Four policemen were shot dead on Saturday morning after assailants fired at a checkpoint on the Saqara highway, south of Giza.
Story first published: Saturday, November 28, 2015, 17:26 [IST]