ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.9 ஆக பதிவு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் ஹோன்சூ தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள சில முக்கிய நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருட் சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.












Click it and Unblock the Notifications