For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊரே அழிந்த பின்பும் தனியாக வாழும் 90 வயது தாத்தா.. புயலுக்கு மத்தியில் தில்லாக வாழ்கிறார்

பியூர்டாரிகோ என்ற தீவு புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கூட அங்கு ஒரு முதியவர் தனியாக வசித்து வருகிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஊரே அழிந்த பின்பும் தனியாக வாழும் 90 வயது தாத்தா..வீடியோ

    பியூர்டாரிகோ: அமெரிக்கவிற்கு பக்கத்தில் இருக்கும் மிகச்சிறிய தீவுதான் பியூர்டாரிகோ. இங்கு கடந்த சில மாதங்களாக மாறி மாறி புயல் வீசி வருகிறது. இதனால் தற்போது அந்த தீவின் முக்கால்வாசி பகுதி அழிந்து போய் இருக்கிறது.

    அந்த சிறிய தீவை விட்டு எல்லா மக்களும் வெளியேறிவிட்டார்கள். இந்த நிலையில் அந்த தீவை விட்டு வெளியே வரமாட்டேன் என்று 90 வயது நிரம்பிய 'அலிஜான்ரோ லா லுஸ் ரிவரா' என்ற நபர் தெரிவித்து இருக்கிறார்.

    மேலும் புயலுக்கும் கொடூரமான இடிபாடுகளுக்கும் இடையிலும் அவர் தில்லாக வசித்து வருகிறார். தற்போது அமெரிக்கா முழுக்க அவரது ஊர் பாசம் வைரல் ஆகியுள்ளது.

    பியூர்டாரிகோவில் மோசமான புயல்

    பியூர்டாரிகோவில் மோசமான புயல்

    பியூர்டாரிகோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'இர்மா' என்ற புயல் வந்தது. இந்த புயல் காரணமாக பியூர்டாரிகோ பகுதியில் அமெரிக்க அரசாங்கம் அவசரநிலையை பிரகடனப்படுத்தியது. அதன்பின் தற்போது மீண்டும் அங்கு 'மரியா' என்ற புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக அங்கு இருந்த மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அந்த தீவைவிட்டு நிறைய மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

    பாதிப்பு அதிகம்

    பாதிப்பு அதிகம்

    இந்த மரியா புயல் காரணமாக அங்கு நிறைய சேதங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரே வாரத்தில் 1,500க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவில் இருக்கும் 90 சதவிகிதமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. லட்சக்கணக்கில் மக்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டார்கள். அங்கு இருந்த மக்கள் அனைவரும் நியூயார்க், கலிபோர்னியா, பென்சில்வேனியா என அமெரிக்காவின் மாகாணங்களில் குடியேறி வருகிறார்கள்.

    அதே ஊர்

    அதே ஊர்

    இந்த நிலையில் பியூர்டாரிகோவில் வசித்து வந்த அலிஜான்ரோ என்ற 90 வயது முதியவர் அந்த தீவை விட்டு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். முதல் இரண்டு நாட்கள் அங்கு இருந்து பென்சில்வேனியா சென்று இருக்கிறார். ஆனால் அங்கு இருக்க பிடிக்காமல் மீண்டும் பியூர்டாரிகோ பகுதிக்கே திரும்பி வந்து இருக்கிறார். இப்போது அவர் நகரத்தில் அவர் மட்டும் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் பியூர்டாரிகோவில் சில அரசு அதிகாரிகளும் வாழ்ந்து வருகின்றனர்.

    வாழ்க்கை எப்படி

    வாழ்க்கை எப்படி

    இந்த புயல் காரணமாக முக்கால்வாசி நகரம் அழிந்து போய்விட்டது. கடந்த 8 நாட்களாக அங்கு எங்குமே மின்சாரமும், தண்ணீரும் இல்லை. ஆனாலும் அந்த தாத்தா தனியாக அங்கு எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறார். மேலும் அதுதான் தான் பிறந்து ஊர் எப்போது அதைவிட்டு வரமாட்டேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் செயல் பியூர்டாரிகோ மக்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    English summary
    A 90 year old man named Alejandro La Luz Rivera lives in Puerto Rica hasn't left home after hurricane. The whole island has left the city and took new residence in New York and some other places. The only man living in that city is Alejandro La Luz Rivera.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X