இறங்கி எல்லாரும் பஸ்ல போங்க... விமானத்தை பாதியில் நிறுத்தி கட்டளையிட்ட பாக், பைலட்!
பாகிஸ்தானில் ஒரு விமான ஓட்டி விமானத்தை பாதியில் இறக்கிவிட்டு பயணிகளை பஸ் பிடித்து போகும்படி கூறியிருக்கிறார்.
லாகூர்: பாகிஸ்தானில் ஒரு விமான ஓட்டி விமானத்தை பாதியில் இறக்கிவிட்டு பயணிகளை பஸ் பிடித்து போகும்படி கூறியிருக்கிறார். பாகிஸ்தானின் லாகூரில் நடந்த இந்த சம்பவம் மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.
விமானத்தை சரிவர இயக்குவதற்கு உண்டான சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லை என அந்த விமான ஓட்டி காரணம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் பயணத்திற்கு உண்டான பணத்தையும் அவர்கள் வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றனர்.
இதையடுத்து விமான ஓட்டிக்கும், பயணிகளுக்கும் இடையில் இதனால் பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டது. பயணிகளை விமானத்தை விட்டு வெளியேற்ற நிறைய வித்தியாசமான வழிகளை விமான நிறுவனம் கடைப்பிடித்து குறிப்பிடத்தக்கது.

பாதியில் தரை இறக்கப்பட்டது
பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான சர்வதேச பாகிஸ்தான் விமானம் நேற்று அபுதாபியில் இருந்து பாகிஸ்தானின் யார் ரஹீம் கான் என்ற பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த விமானம் பாதியில் லாகூரில் நிறுத்தப்பட்டது. மேலும் விமானம் ஓட்டுவதற்கு உண்டான போதுமான வெளிச்சமும், சூழ்நிலையும் இல்லை என்று இதற்கு காரணம் கூறப்பட்டது.

பஸ் ஏறி போங்க
இந்த நிலையில் அந்த விமானத்தின் ஓட்டுநர் பயணிகளை பாதியில் இறக்கிவிட்டது மட்டும் இல்லாமல். பயணிகளிடம் உங்களுக்கு பணம் அளிக்கப்டும் பஸ் பிடித்து செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் பயணிகள் அவரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். மேலும் அந்த விமானத்தை விட்டு இறங்குவதற்கும் மறுத்துவிட்டனர்.

பயணிகளுக்கு புதிய கஷ்டம்
இதையடுத்து பயணிகளை விமானத்தை விட்டு இறங்க செய்வதற்காக அந்த விமான பணிப்பெண்கள் விமானத்தின் ஏசியை அணைத்து இருக்கின்றனர். கதவுகளையும் சாத்தி வைத்து இருக்கின்றனர். இதையடுத்து பயணிகள் அந்த விமாத்திற்குள் வெயில் சூடு தாங்காமல் வியர்வையில் கஷ்டப்பட்டு இருக்கின்றனர். இதையடுத்து ஒவ்வொரு பயணிகளாக விமானத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

வழக்கு போடப்படும்
மேலும் லாகூரில் இருந்து யார் ரஹீம் கான் என்ற இடம் 625 கிமீ தூரம் இருப்பதாகவும் அவ்வளவு தூரம் பேருந்தில் செல்ல முடியாது என்றும். வேறொரு விமானம் ஏற்பாடு செய்யும் படியும் பயணிகள் விமான ஓட்டியிடம் கூறியிருக்கின்றார். ஆனால் விமான நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து பயணிகளில் சிலர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவு செய்து இருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications