மாஸ்க்கை மறந்ததால்... பதறிய ஜெர்மனி அதிபர்... பாராட்டும் நெட்டிசன்கள் வைரல் வீடியோ
பெர்லின்: நாடாளுமன்றத்தில் மாஸ்க்கை மறந்ததால் பதறியடித்துக் கொண்டு எழுந்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், ஜெர்மனி மற்ற ஐரோப்பிய நாடுகளைவிடச் சிறப்பாகவே கொரோனை வைரசை கட்டுப்படுத்தியது. சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, முறையான கட்டுப்பாடுகள் என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைகளும் கொரோனா பரவலைக் குறைக்க உதவியது.

இந்நிலையில், ஏஞ்சலா மெர்க்கல் தனது மாஸ்க்கை அணியாமல் நாடாளுமன்றத்தில் தனது இருப்பிடத்தில் அமர்ந்துவிட்டார். மாஸ்க்கை அணியவில்லை என்பதை சில நொடிகளுக்குப் பின்னரே உணர்ந்த ஏஞ்சலா மெர்க்கல், பதறியடித்தவாறு சென்று மாஸ்க்கை எடுத்து அணிந்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதிபராக இருந்தாலும்கூட ஏஞ்சலா மெர்க்கல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றி ஏஞ்சிலா மெர்க்கல் கொரோனா பரவல் மீண்டும் பரவுவதைத் தடுக்க வரும் மார்ச் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும், அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவில் மேற்கொண்டால் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
German Chancellor Angela Merkel panics after forgetting her face mask pic.twitter.com/FGxhUTMzkE
— Reuters (@Reuters) February 19, 2021
இதன் காரணமாக வளரும் நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி விரைவில் சென்றடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பல மாதங்களாக ஜெர்மனி நாட்டில் குறைந்திருந்த கொரோனா பரவல் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகப்படுத்தப்பட்டன.
ஜெர்மனி நாட்டில் தற்போது வரை 23.81 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல நேற்று மட்டும் 571 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர், இதுவரை 68, 118 பேர் கொரோனா காரணமாக ஜெர்மனியில் உயிரிழந்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications