லண்டனில் பெண் கொரில்லா குரங்கிற்கு “சிசேரியன்” மூலம் பிரசவம் - புட்டிப் பாலில் உயிர் வாழும் குட்டி
லண்டன்: இங்கிலாந்தில் கொரில்லா குரங்கு ஒன்றிற்கு சிசேரியன் மூலமாக குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அக்குட்டிக் குரங்கு காப்பக வேலையாளர்களின் தீவிர பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்ட்டல் நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் கேரா என்ற பெண் கொரில்லா குரங்கு சமீபத்தில் கருத்தரித்தது.

அவதிப்பட்ட கேரா:
பிரசவக்காலம் நெருங்கும் வேளையில் தனது கருப்பையில் வளர்ந்துவந்த அந்த பெண் குட்டியை இயற்கையான முறையில் ஈன்றெடுக்க முடியாத நிலையில் கேரா அவதிப்படுவதை கண்டு அங்கிருந்த பராமரிப்பு பணியாளர்கள் கவலை அடைந்தனர்.

மகப்பேறு நிபுணர் சாதனை:
உடனடியாக விலங்குகளுக்கு பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்தவரான மகப்பேறு நிபுணர் டேவிட் காஹில் என்பவர் அங்கு வரவழைக்கப்பட்டார்.

புட்டிப்பால் குடிக்கும் குட்டி:
பெயரிடப்படாத அந்த குட்டியின் உயிரை புட்டிப் பாலின் மூலம் காப்பாற்ற வனவிலங்கு காப்பக ஊழியர்கள் முயற்சித்து வருகின்றனர்.

மனிதனுக்கு நெருக்கமானவை:
கொரில்லா, மனிதர்களுக்கு நெருங்கிய இனமான ஆப்பிரிக்காவில் வாழும் வாலில்லாப் பெரிய மனிதக் குரங்கு இனமாகும். மனிதர்களும் கொரில்லாக்களும் சிம்பன்சி போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் முதனி எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை.

சைவமும், அசைவமும்:
பார்ப்பதற்கு கருப்பாய் பெரிய உருவமாய் இருப்பினும், இவை இலை தழை பழம், கிழங்கு உண்ணிகள். என்றாலும் சிறிதளவு பூச்சிகளையும் உண்ணும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications