Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு கட்டுப்பாடு.. நமாஸ் வேளையில் துர்கா பூஜை கொண்டாட தடை.. புது கண்டிஷன்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இந்துக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அங்கு துர்கா பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு வங்கதேச இடைக்கால அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வங்கதேசம் உருவாக காரணமாக இருந்து உயிர் துறந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக மாணவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்திய நிலையில் கடந்த மாதம் 5ம் தேதி வங்கதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

bangladesh muhammad yunus durga puja

உயிர் பயத்தில் வந்த ஷேக் ஹசீனாவுக்கு மத்திய அரசு தற்காலிகமாக அடைக்கலம் கொடுத்துள்ளது. தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் உள்ளார். முகமது யூனுஷ் அந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் தான் மாணவர்கள் போராட்டம் மற்றும் இடைக்கால அரசு அமைந்த பிறகு வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், கோவில்கள் சேதப்படுத்தப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷிடம் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் உள்ளிட்டவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இருப்பினும் இடைக்கால அரசு என்பது இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் தான் தற்போது வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வடமாநிலங்களில் துர்கா பூஜை என்பது கோலாகலமாக கொண்டாடப்படும். குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை என்பது ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல் வங்கதேசத்தில் உள்ள இந்துக்களும் துர்கா பூஜையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு மொத்தம் 33,431 பந்தல்களில் துர்கா பூஜைகள் கொண்டாடப்பட்டது. இந்த முறை 32,666 பந்தல்களில் துர்கா பூஜை கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக தலைநகர் டாக்கா தெற்கு பகுதயில் 157 மண்டபங்கள், வடக்கு பகுதியில் 88 மண்டபங்களில் துர்கா பூஜை நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 9 ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை இந்த துர்கா பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வங்கதேசத்தில் இந்துக்கள், இந்து அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது வங்கதேசத்தில் துர்கா பூஜைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை விவகாரத்துறை அட்வைசராக உள்ள ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛நமாஸ் செய்யும் வேளை மற்றும் Azaan வேளைகளில் துர்கா பூஜை கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும். இந்த வேளையில் துர்கா பூஜை, பக்தி பாடல்கள் தொடர்பான ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடக்கூடாது. மேள தாளங்கள் முழங்க கூடாது.

இதுதொடர்பாக இந்து அமைப்புகளுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பூஜை பந்தல், மண்டபங்களில் 24 மணிநேர பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது'' என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனிஷ் கூறுகையில், ‛‛நாம் மதநல்லிணக்க நாடாக இருக்கிறோம். இதனால் மத நல்லிணக்கத்தை யாரும் சீர்க்குலைக்கும் வகையில் செயல்பட கூடாது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது. சட்டத்தை யாரேனும் கையில் எடுத்தால் பதற்றத்தை ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+