நைஜிரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம்: 80 பேர் பலி; 100 மேற்பட்டோர் படுகாயம் !
மாய்துகுரி: நைஜிரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தனி நாடு கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜீன் மாதம் 10 வயது சிறுமி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டவர்களை கடத்திச் செல்லும் போகோ ஹரம் தீவிரவாதிகள், பாலியல் அடிமைகளாகவும், தற்கொலைப் படைத் தாக்குதலுக்கும் உபயோகிக்கின்றனர்.

இந்நிலையில், நைஜிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாய்துகுரி நகரில் 3 பெண்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 80 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாய்துகுரி சந்தை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் அந்த பகுதியில் உள்ள சோதனைச் சாவடி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும், நைஜிரிய படைகளை இடைமறித்து 10-க்கும் மேற்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தவாரி கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டி தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications