ஃபேஸ்புக், ட்விட்டரில் பிரபலமாகும் ஐஎஸ்ஐஎஸ் கொடியை எரிக்கும் சவால்
ஐஸ் பக்கெட் சவால் ஏ.எல்.எஸ். எனும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சவாலை உலக மக்கள் பலரும் ஏற்று ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நிதி அளித்துள்ளனர். இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஏழைகளுக்கு உதவும் வகையில் ரைஸ் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தினார்.
காஸாவில் பாலஸ்தீனியர்கள் படும்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரபுள் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லெபனான் மக்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடியை எரிக்கும் பர்ன் ஐஎஸ்ஐஎஸ் ஃபிளாக் சவாலை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த சவாலை ஏற்று பலரும் ஐஎஸ்ஐஎஸ் கொடியை எரித்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்கவே இந்த சவாலை லெபனான் மக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக், சிரியா, லெபனானில் அட்டகாசம் செய்து வருகிறார்கள். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.