பின்லாந்தில் மாயமான சென்னை பொறியாளர் ஹரிசுதன் கடற்கரையில் சடலமாக மீட்பு
பின்லாந்து நாட்டில் காணாமல் போன சென்னை பொறியாளர் ஹரிசுதன் கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஹர்னசாரி: பின்லாந்து நாட்டில் மாயமான சென்னை பொறியாளர் ஹரிசுதன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரது உடல் கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஜார்ஜ் டவுனை சேர்ந்த 26 வயது பொறியாளர் ஹரிசுதன். இவர் பின்லாந்தில் டி சி எஸ் நிறுவனத்தில் பணி புரிந்துவந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவர் காணாமல் போய் விட்டதாக இந்திய தூதரகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில பின்லாந்தில் உள்ள ஹெர்னெசாரி என்னும் கடற்கரையில் வியாழனன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று அடையாளம் காணப்பட்டு பரிசோதனைக்கு சடலம் அனுப்பப்பட்டுள்ளது. சட்டபூர்வமான நடவடிக்கைகள் முடிந்த பின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் அளிக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று ஃபின்லாந்து நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹரிசுதன் அவர் தாயாருடன் மொபைலில் இருந்து பேசி உள்ளார். பிறகு அவர் தனது வீடு நோக்கி மாலை 5.40க்கு நடந்து செல்வது ஒரு சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. அதன் பின் மாலை சுமார் 6.45 மணிக்கு அவருடைய மொபைல் ஹர்னசாரியில் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் வெளியில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பின்லாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஹரிசுதனின் செல்போன் சிக்னலை வைத்து சடலத்தை மீட்டுள்ளதாகவும், எப்படி இறந்தார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications