இந்திய சுதந்திர தினம்: துபாயில் ரத்த தான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய தூதரகம் சார்பில் இந்தியாவின் சுதந்திர தின விழாவினையொட்டி ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.

15.08.2014 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை துபாய், இந்திய தூதரக அரங்கில் இச்சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது.
ரத்ததான முகாமினை இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் துவக்கி வைக்கிறார். லத்திஃபா மருத்துவமனை ரத்தவங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜைனப் காதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சியில் ரத்ததானம் செய்ய விரும்புவோர் 050 5151926, 056 1591216, 056 9541949 எனும் அலைபேசி எண்களில் தங்களைப் பற்றிய விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications