பற்றி எரிந்த லிபிய எண்ணெய்க் கிடங்கு.. லைவாக படம் பிடித்த நாசா சாட்டிலைட்
திரிபோலி: உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் லிபியாவில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்த விபத்தை, வானில் இருந்தபடி நாசாவின் செயற்கைக்கோள் படம் எடுத்து அனுப்பியுள்ளது.
உலகில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்று லிபியா. பயங்கரவாத தாக்குதல் மற்றும் உள்நாட்டு போர் காரணமாக தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதுவரை பயங்கரவாத தாக்குதல் மற்றும் உள்நாட்டு போரால், ஆயிரக்கணக்கானோர் அங்கு உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்தவாரம் அங்கு சிப்ரா பகுதிகளில் ஐந்து எண்ணெய் கிடங்குகளில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கரும்புகை வானில் வட்டமிட்டது.

இதனை நாசாவின் அக்வா செயற்கைக்கோள் வானில் இருந்தபடி படமெடுத்து அனுப்பியுள்ளது. இதில், புகையின் போக்கு தெள்ளத்தெளிவாக பதிவாகியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட ஒவ்வொரு கிடங்கும் சுமார் 4 லட்சம் பேரல் எண்ணெய் கொண்டவை ஆகும். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் காற்று மாசுபாடு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications