7 வயது மகளை பைப்பால் அடித்துக் கொன்ற தந்தை - சவுதியில் பயங்கரம்!

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதியில் பெற்ற மகள் என்றும் பாராமல் பைப் ஒன்றால் தலையில் அடித்துக் கொன்ற தந்தையால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் ஈத் அல் ஆதா நகரை சேர்ந்த 7 வயதான சிறுமி யாரா. தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட அறிவுரையின் பேரில் யாரா தனது தந்தையுடன் கடந்த 3 மாதங்களாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தந்தை, யாராவைப் பார்த்து உனக்கு என்னைப்பிடித்துள்ளதா, என் மேல் அன்பு உள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு யாரவோ எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று பதில் கூறியுள்ளார், இதனால் கோபம் கொண்ட தந்தை, ஏர் கண்டிஷன் பைப்பை எடுத்து யாராவின் தலையில் அடித்துள்ளார். அதுமட்டுமல்லாது பின்னர் கம்பியை எடுத்து தலையில் தாக்கி உள்ளார். இதனால் அவளது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் வழியிலேயே சிறுமி மரணம் அடைந்தார்.

இதனையடுத்து தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தனது வாக்குமூலத்தில், எனது மகளுக்கு தக்க பாடம் புகட்ட விரும்பியதால் இப்படியொரு காரியத்தை செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+