இனிமேலும் எங்களால் முடியாது: ஆஸ்திரியாவுக்கான ரயில் போக்குவரத்தை நிறுத்திய ஜெர்மனி
வியன்னா: அகதிகள் பிரச்சனை காரணமாக ஆஸ்திரியாவில் இருந்து வரும் ரயில்களை எல்லைக்குள் அனுமதிக்க ஜெர்மனி மறுத்துள்ளது.
ஆயிரக்கணக்கான அகதிகள் அதிலும் பெரும்பாலானோர் சிரியாவைச் சேர்ந்தவர்கள் தங்களின் நாடுகளை விட்டு வெளியேறி ஆஸ்திரியாவை அடைந்து அங்கிருந்து ரயில் மூலம் ஜெர்மனி செல்கின்றனர். அகதிகளை ஏற்றுக் கொள்வதாக ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் கடந்த வாரம் அறிவித்ததில் இருந்து அங்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எதிர்பார்த்ததை விட அதிக அளவில் அகதிகள் வருவதால் ஆஸ்திரியாவில் இருந்து வரும் ரயில்களை எல்லையுடன் நிறுத்தியது ஜெர்மனி. மேலும் ஜெர்மனியில் இருந்து ஆஸ்திரியாவுக்கு செல்லும் ரயில்களையும் நிறுத்தியது. இந்த ரயில் நிறுத்தம் நேற்றில் இருந்து இன்று காலை 6 மணிவரை 13 மணிநேரம் அமலில் இருந்தது.
இது குறித்து ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் டி மெய்சர் கூறுகையில்,
ஜெர்மனிக்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், அவர்கள் இங்கு வருகையில் முறைப்படி ஏற்றுக் கொள்ளவுமே இந்த நடவடிக்கை. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது என்றார்.
இந்த ஆண்டு மட்டும் செர்பியாவில் இருந்து 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் ஹங்கேரி வந்து அங்கிருந்து ஆஸ்திரியா வழியாக ஜெர்மனி சென்றுள்ளதாக ஹங்கேரி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் ஜெர்மனிக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் அகதிகளாக வந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 8 லட்சம் பேர் அகதிகளாக ஜெர்மனிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications