கருவில் இருக்கும் போது ஆல்கஹால் குடித்த தாய்- பாதிக்கப்பட்ட சிறுமி கோர்ட்டில் வழக்கு!
Subscribe to Oneindia Tamil
லண்டன்: கருவில் இருந்தபோது அதிக ஆல்ஹகால் குடித்த தாயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தாயின்மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கின்றார்.
இங்கிலாந்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஆல்கஹால் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டாள். அதற்காக தற்போது சிகிச்சை பெற்று வருகிறாள்.

இந்த நிலையில் அவள் கோர்ட்டில் தனது தாயார் மீது வினோத வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளார். இவளது தாயார் கர்ப்பமாக இருந்த போது நிறைய வோட்கா மற்றும் பீர் குடித்தார்.
அதன் பாதிப்பு காரணமாக தான் கருவில் இருந்து தனக்கு ஆல்கஹால் சம்பந்தப்பட்ட நோய் தாக்கியதாக வழக்கு தொடர்ந்துள்ளாள்.
அதற்காக தனது தாயாருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறாள். இந்த வழக்கு விசாரணை தற்போது கோர்ட்டில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications