இந்து கோயிலை அடித்து நொறுங்கி, தீ வைத்த பாக். இஸ்லாமியர்கள்... கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டிலுள்ள இந்து கோயில் ஒன்று இடிக்கப்பட்டு, தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா தலைநகர் பெஷாவரில் இருந்து தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் கரக்.

இந்து கோயில் இடிப்பு
இங்குள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் இந்து கோயில் ஒன்றை அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து அடித்து நொறுங்கியுள்ளனர். மேலும். அந்தக் கோயிலுக்குத் தீயும் வைத்துள்ளனர். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் கோயிலுக்கு இடித்து தீ வைக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இஸ்லாமிய மதகுருமார்கள் காரணம்
இது குறித்து அப்பகுதி ஆய்வாளர் இர்பானுல்லா கான், "இப்பகுதியிலுள்ள இஸ்லாமிய மதகுருமார்களால் தூண்டப்பட்ட சுமார் 1,200 இஸ்லாமியர்கள் இங்கிருக்கும் இந்து கோயிலை இடிக்க முயன்றுள்ளனர். இந்தக் கோயில் நீண்ட ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லை. இருப்பினும், சமீபத்தில் இக்கோயிலைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது முதலே இங்குள்ள இந்து-முஸ்லீம்களுக்கு இடையே கோயில் தொடர்பான பிரச்சினை அதிகரித்தது. இது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோக்களைக் கொண்டு மற்றவர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறோம்" என்றார்.

இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் 97% மக்கள் இஸ்லாமியர்கள், மீதமிருக்கும் 2% மட்டுமே இந்துக்கள். அங்கு மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடும் வன்முறையும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், மத சுதந்திர மீறல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளுக்கான பட்டியலில் பாகிஸ்தானை அமெரிக்கா சேர்த்தது.

கடும் நடவடிக்கை
கைபர் பக்துன்க்வா மாகாண தகவல் தொடர்பு அமைச்சர் கம்ரான் பங்காஷ், "இத்தாக்குதல் குறித்து வெளியாகும் செய்திகள் உண்மையானவை தான். நாங்கள் மத சுதந்திரத்தை நம்புகிறோம். கோயில் இடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இடிப்பதே நோக்கம்
இஸ்லாமிய மதகுருக்களின் உரைக்குப் பின்னரே அந்தக் கூட்டம் கோயிலை நோக்கிச் சென்றதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் அவர்கள் கோயிலை இடிக்கத் தயார் நிலையிலேயே சென்றனர். சுத்தியல் மற்றும் எண்ணெய் கேன்களை அவர்கள் எடுத்துச் சென்றனர் என்றும் கிராம கூறினர்.

அதிகரிக்கும் தாக்குதல்
இத்தாக்குதல் குறித்து இந்து உரிமை ஆர்வலர் கபில் தேவ், "பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. துரதிர்ஷ்டவசமாக மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பாக்கிஸ்தானில் அதிகரித்து வருகிறது. எங்கள் வழிபாட்டுத் தலங்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடைபெறுகின்றன" என்றார்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications