ஓ மை காட்.. மூதாட்டியை அப்படியே உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு.. !
மகஸ்ஸார், இந்தோனேசியா: இந்தோனேசியாவில் 54 வயதான பெண்ணை அப்படியே உயிரோடு விழுங்கி விட்டது ஒரு ராட்சத மலைப்பாம்பு. அந்தப் பாம்பை அறுத்து மூதாட்டியின் இறந்த உடலை வெளியே எடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் ஆள் விழுங்கி மலைப்பாம்புகள் சர்வ சாதாரணம். இந்த நிலையில் அங்குள்ள மகஸ்ஸார் என்ற ஊரில் ஒரு காய்கறி தோட்டத்தில் ராட்சத மலைப்பாம்பு வித்தியாசமாக நெளிந்து கொண்டிருந்ததை அப்பகுதியினர் பார்த்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மலைப்பாம்பு நிபுணர்களுடன் போலீஸார் விரைந்து வந்தனர். அந்தப் பாம்பைப் பார்த்த நிபுணர்கள், அது மனிதரை விழுங்கியிருக்கலாம் என்று சந்தேகம் கொண்டனர். இதையடுத்து அந்தப் பாம்பு கொல்லப்பட்டது. அதன் பிறகு பாம்பின் வயிற்றுப் பகுதியில் 7 மீட்டர் அளவுக்கு அறுக்கப்பட்டது. .அப்போது வயிற்றுக்குள் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.
அந்தப் பெண்ணின் பெயர் வா திபா. அதே கிராமத்தைச் சேர்ந்தவர். 54 வயதான இவர் தோட்டத்தில் இருந்தபோது பாம்பு பிடித்து விழுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது தலையை முதலில் பாம்பு பிடித்து விழுங்கியுள்ளது. பிறகு முழு உடலையும் அது விழுங்கி விட்டது. உடல் சேதமில்லாமல் அப்படியே இருந்தது.
இதுபோன்ற ராட்சத ஆள் விழுங்கி மலைப்பாம்புகள் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் சர்வ சாதாரணமாகும். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோ: