Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேற லெவல்.. கல்யாண சர்டிபிகேட்டையே "பச்சைக்குத்திய" மாப்ளை.. திக்குமுக்காடிய மணப்பெண்.. வாவ் டாட்டூ

இந்த டாட்டூவை வரைந்த கலைஞர் கூறுகையில், “இதற்கு முன்னர் நான் இதுபோன்று டாட்டூவை வரைந்தது கிடையாது. எனவே சற்று பயத்துடன்தான் இதனை வரைந்து கொடுத்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் தனது மனைவி மீதுள்ள அதீத காதலால் அவர்களுடைய திருமண சான்றிதழை கையில் பச்சை குத்தி அசத்தியுள்ளார். முழு சான்றிதழையும் பச்சை குத்தி முடிக்க சுமார் 8 மணி நேரம் ஆகியுள்ளது.

காதலிக்கும்போது தங்களது காதலியை ஈர்க்க இளைஞர்கள் பல வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு. சாதாரண மோதிரத்தில் தொடங்கி விலையுயர்ந்த கார்கள் வரை காதலிக்கா பரிசளிப்பார்கள். சிலர் கொஞ்சம் வித்தியாசமாக காதலியின் பெயர்களை வீடுகளுக்கோ அல்லது செல்லப் பிராணிகளுக்கோ வைத்து மகிழ்வார்கள். அந்த வரிசையில் தற்போது இளைஞர் ஒருவர் தங்களது திருமண சான்றிதழை கையில் பச்சை குத்தியுள்ளார்.

எல்லோரும் காதலிக்கும்போதுதான் இதுபோல பச்சைகுத்திக்கொள்வார்கள் ஆனால் 'வால்' எனும் இளைஞர் திருமணம் ஆன பின்னர் பச்சைகுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் சரபுரி மாகாணத்தில் உள்ள ஒரு டாட்டூ கடையில் எனது விருப்பத்தை தெரிவித்தேன். முதலில் நான் என்ன சொல்கிறேன் என்று கடைக்காரருக்கு புரியவில்லை. திருமண பத்திரிகையை டாட்டூ போட வேண்டுமா? என்று கேட்டார். இல்லை நண்பா என்னுடை திருமண சான்றிதழை டாட்டூ போட வேண்டும் என்று புரிய வைத்தேன்.

டாட்டூ

டாட்டூ

சுமார் 8 மணி நேரமாக என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இடது கை வைத்த இடத்தில் வைத்த மாதிரியே இருந்தது. பின்னர் ஒருவழியாக டாட்டூவை போட்டுவிட்டார்கள். எதிர்பார்த்தபடி இது பச்சை, நீலம், சிவப்பு நிறங்களில் மிகச்சரியாக வந்திருந்தது. உண்மையான திருமண சான்றிதழுக்கும், இதற்கும் இடையே பெரிய அளவுக்கு வித்தியாசம் இருக்கவில்லை. ஆனால் 8 மணி நேரமாக கையை ஒரே இடத்தில் வைத்திருந்ததால் என்னால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை. இதே வலியோடு வீட்டிற்கு கார் ஓட்டிக்கொண்டு வந்து சேர்ந்தேன்.

 காதலர் தினம்

காதலர் தினம்

சரியாக பிப்ரவரி 13 அன்று நள்ளிரவு 11.58 மணிக்கு எனது மனைவியிடம் இந்த டாட்டூவை காட்டினேன். முதலில் அவள் பயந்துவிட்டாள். கைக்கு ஏதோ அடிப்பட்டுவிட்டது. ஒரே சிவப்பாக இருக்கிறது மருத்துவமனைக்கு போகலாம் வா என்று அழைத்தாள். பின்னர் அவளுக்கு சொல்லி புரிய வைத்தேன். என்னையும் டாட்டூவையும் மாறி மாறி பார்த்துவிட்டு திடீரென திட்ட தொடங்கிவிட்டாள். என்னுடைய மண்டை குழம்பிவிட்டது என்றும், மனநல ஆலோசகரை சென்று பார்க்க வேண்டும் எனவும் திட்டிக்கொண்டிருந்தாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

 சமாதானம்

சமாதானம்

கொஞ்ச நேரம் கழித்து என்னிடம் வந்து ஏன் இதையெல்லாம் செய்கிறார்? என்று கேட்டு கட்டிப்பிடித்துக்கொண்டாள். அவள் திட்டியது எல்லாம் மறந்துவிட்டது" என்று கூறியுள்ளார். இந்த டாட்டூவை வரைந்த கலைஞர் கூறுகையில், "இதற்கு முன்னர் நான் இதுபோன்று டாட்டூவை வரைந்தது கிடையாது. எனவே சற்று பயத்துடன்தான் இதனை வரைந்து கொடுத்தேன். எனக்கு இது புதிய அனுபவமாகதான் இருந்தது. இதில் மிகவும் சிரமமான பகுதி எதுவெனில், சுற்றியிருந்த டிசைன்தான்.

 கொஞ்சம் கஷ்டம்தான்

கொஞ்சம் கஷ்டம்தான்

அதேபோல சர்டிஃபிகேட்டில் இருந்த அனைத்தையும் இந்த சிறிய கைக்குள் கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். இதற்கு முன்னர் இவருடைய மனைவியின் புகைப்படத்தை டாட்டூவாக வரைந்திருக்கிறேன். அந்த வகையில் இவர் எனக்கு கொடுத்த இரண்டாவது பெரிய அசைமென்ட் இது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+