இஸ்ரேல் மீது சர்வதேச விசாரணை: ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு
ஜெனீவா: காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் இந்த விவகாரத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்து வாக்களித்து புதிய முன் உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன.

பாலஸ்தீன வரைவு
"கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டும்" என்று பாலஸ்தீன் கொண்டு வந்த வரைவுக்கு ஆதரவாக இந்த நாடுகள் வாக்களித்துள்ளன.

29 நாடுகள் ஆதரவு
46 உறுப்பு நாடுகளை கொண்ட ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில், 29 நாடுகள் பாலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தன. 17 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. இதில் ஐரோப்பிய நாடுகள் முக்கியமானவை.

அமெரிக்கா எதிர்ப்பு
இஸ்ரேலின் நீண்ட கால நட்பு நாடாக விளங்கும், அமெரிக்கா மட்டுமே, இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.

இந்தியா கோரிக்கை
"இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை அமலுக்கு வர வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு. இந்த சண்டை காரணமாக பல உயிர்களும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களும் நாசமாகியுள்ளதற்காக இந்தியா வருத்தப்படுகிறது" என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை விவாதத்தில் பேசிய இந்தியாவுக்கான ஐநாவின் நிரந்தர பிரதிநிதி அசோக் முகர்ஜி தெரிவித்தார்.

பின்புலம்
இரண்டு வாரங்களுக்கு மேலாக காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட 680 பாலஸ்தீனியர்கள் மற்றும் 31 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் சமானதான உடன்படிக்கை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் கொண்டு வந்தது. முன்னதாக இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான தீர்வை எட்ட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் முன்வரவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருந்தது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications