For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானத்தில் தூங்கிய சிறுமியிடம் கையை வைத்து விளையாடிய இந்திய டாக்டர் கைது

Google Oneindia Tamil News

சியாட்டில்: அமெரிக்காவில் ஓடும் விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக இந்திய டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஜூலை 23ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுமி தனியாக விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அருகில் பயணித்த இந்த 28 வயது இந்திய டாக்டர், சிறுமியின் தொடையில் கை வைத்துள்ளார். இதனால் அச்சிறுமி திடுக்கிட்டு எழுந்துள்ளார். சியாட்டிலிலிருந்து நியூஜெர்சி சென்று கொண்டிருந்த யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் அது.

Indian Doctor arrested for groping a minor girl சியாட்டில்: அமெரிக்காவில் ஓடும் விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக இந்திய டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஜூலை 23ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுமி தனியாக விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அருகில் பயணித்த இந்த 28 வயது இந்திய டாக்டர், சிறுமியின் தொடையில் கை வைத்துள்ளார். இதனால் அச்சிறுமி திடுக்கிட்டு எழுந்துள்ளார். சியாட்டிலிலிருந்து நியூஜெர்சி சென்று கொண்டிருந்த யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் அது. அந்த நபரின் பெயர் விஜயக்குமார் கிருஷ்ணப்பா எனத் தெரிய வந்துள்ளது. அவரது செயல் குறித்து விமான ஊழியர்களிடம் சிறுமி புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் வேறு சீட்டில் அமர வைக்கப்பட்டார். விமானம் நெவார்க் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது டாக்டர் வேகமாக இறங்கிப் போய் விட்டார். இதையடுத்து சிறுமி தனது பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் விமான நிறுவனம் மீதும், டாக்டர் மீதும் புகார் கொடுத்தனர். இந்த விவகாரம் பின்னர் எப்பிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி கிருஷ்ணப்பாவைக் கம்டுபிடித்துக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரைக் கண்காணிப்பின் கீழ் போலீஸார் வைத்துள்ளனர். கிருஷ்ணப்பா மருத்துவம் படித்து வருகிறார். அவருக்காக வாதாட கோர்ட்டே வக்கீலையும் நியமித்துள்ளது.

அந்த நபரின் பெயர் விஜயக்குமார் கிருஷ்ணப்பா எனத் தெரிய வந்துள்ளது. அவரது செயல் குறித்து விமான ஊழியர்களிடம் சிறுமி புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் வேறு சீட்டில் அமர வைக்கப்பட்டார். விமானம் நெவார்க் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது டாக்டர் வேகமாக இறங்கிப் போய் விட்டார். இதையடுத்து சிறுமி தனது பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் விமான நிறுவனம் மீதும், டாக்டர் மீதும் புகார் கொடுத்தனர்.

இந்த விவகாரம் பின்னர் எப்பிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி கிருஷ்ணப்பாவைக் கம்டுபிடித்துக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரைக் கண்காணிப்பின் கீழ் போலீஸார் வைத்துள்ளனர்.

கிருஷ்ணப்பா மருத்துவம் படித்து வருகிறார். அவருக்காக வாதாட கோர்ட்டே வக்கீலையும் நியமித்துள்ளது.

English summary
Indian Doctor arrested for groping a minor girl
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X