பாகிஸ்தான் செல்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர்!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஸ், இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.

இந்த பயணத்தின் போது காஷ்மீர் விவகாரம் உட்பட அனைத்து இருதரப்பு பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது என்றார்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியும் கூட, இந்திய வெளியுறவுத் துறை செயலர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வார் என்று கூறியிருந்த நிலையில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இத்தகவல் தற்போது வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications