துபாய்: உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து இந்தியப் பெண் மரணம்
துபாய்: துபாயில் உயரமான கட்டிடத்தில் இருந்து இளம் வயதுடைய இந்தியப் பெண் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாயில் ஜுமாரியா லேக் டவர் பகுதியில் அமைந்துள்ள கோல் க்ரஸ்ட் வியூ கட்டிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்து போன பெண்ணின் பெயரை ஊடகங்கள் வெளியிடவில்லை. அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த பெண் அந்த கட்டிடத்தில் வசித்து வருபவர் என்று அங்கு துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரியும் நபர் தெரிவித்தார். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். மாலை நேரத்தில் துப்புறவு செய்யும் போது பெண்ணின் சடலத்தை கண்ட அவர் போலீசில் தகவல் தெரிவித்தார். இது குறித்து கட்டிட மேலாளர், உதவியாளர்கள், துப்புறவுத் தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.