நெற்றிக்கண்ணுடன் ஜெர்மனியில் குழந்தை பிறந்ததா?.. 17ஆம் நூற்றாண்டு முனிவர் கணித்தாரா?.. உண்மை என்ன?
பெர்லின்: ஜெர்மனியில் 3 கண்களை கொண்ட குழந்தை ஒன்று பிறந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து இதுவரை நிரூபிக்கப்படாததால் இந்த செய்தி போலியாக இருக்கலாம் என தெரிகிறது.
சிவனுக்கு மூன்றாவதாக ஒரு கண் இருக்கும் என்றும் அந்த கண்ணை மட்டும் அவர் திறந்தால் உலகமே அழிந்துவிடும் என்று கூறுவதுண்டு. புராண படமான திருவிளையாடலில் ஒரு வசனம் வரும், அதில் சிவனின் பாட்டிலோ பொருளிலோ நக்கீரன் குற்றம் கண்டுபிடிப்பார். அதை ஏற்க மறுத்து சிவன் தனது நெற்றிக் கண்ணை திறப்பார்.
அப்போது நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என நக்கீரன் கூறுவார். இவற்றை எல்லாம் படங்களில் பார்த்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.

ஜெர்மனி
ஆனால் ஜெர்மனியில் நெற்றிக் கண்ணுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளதாகவும் அதுகுறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் வைரலாகியுள்ளது. பொதுவாக இருக்கும் இரு கண்களுடன் நெற்றியிலும் ஒரு கண் இருப்பது போன்று உள்ளது.

வீடியோ
இந்த வீடியோவை அனைவரும் ஷேர் செய்து வருகிறார்கள். அந்த குழந்தையின் பெயர் ஸேக் என யாரோ ஒரு பெண் அழைப்பது போல் உள்ளது. டிராலியில் குழந்தை உட்கார வைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை உற்று நோக்கினால் அதன் நெற்றியில் 3ஆவதாக ஒரு கண் இருப்பது தெரிகிறது. அந்த குழந்தையின் இடது கண் எப்படி திரும்புகிறதோ அதே திசையில் நெற்றியில் உள்ள கண்ணும் திரும்புகிறது.

வீடியோ
இது எடிட் செய்யப்பட்ட வீடியோவா என தெரிந்து கொள்ள வீடியோ எடிட்டர்களை கேட்ட போது இது போன்ற எடிட்டிங் எல்லாம் செய்வது மிகவும் சாத்தியம் என்றும் அவற்றை செய்வது மிகவும் சுலபம் என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த வீடியோவை ஷேர் செய்யும் பலர் இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முனிவர் ஒருவர் வெளிநாட்டில் 3 கண்களை கொண்ட குழந்தை பிறக்கும் என ஏற்கெனவே கணித்துள்ளதாக கூறுகிறார்கள். இதே முனிவர்தான் கொரோனா வைரஸ் வரும் என்பதையும் கணித்திருந்தாராம்.
|
உண்மைத்தன்மை
பிறவி குறைபாடு என சொல்லப்படும் கிரேனியோபேஷியல் டூப்ளிகேஷன் இருக்கிறதா என பார்த்து அதன் மூலம் இதன் உண்மைத்தன்மையை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பிறவி குறைபாட்டால் முகத்தில் ஏற்கெனவே உள்ள உறுப்பை போல் டூப்ளிக்கேட்டாக இன்னொரு உறுப்பு நெற்றியில் தோன்றுவது ஆகும். நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே இது போலியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானவுடன் இந்த குழந்தையின் தகவல்களை அறிய மக்கள் கூகுளில் three eyed baby born என தேடி வருகிறார்கள். கூகுளில் டிரென்டிங்கிலும் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications