சர்வதேச அளவில் ட்விஸ்ட்.. பாலத்தீனத்திற்காக களமிறங்கும் சீனா? நடுநடுங்கி போன அமெரிக்கா - இஸ்ரேல்!
ஜெருசலேம்: இஸ்ரேல் பாலத்தீன போரில் இத்தனை காலம் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் சீனா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் தொடங்கியது முதல் உலகப்போரின் முடிவில் இருந்துதான். தற்போது இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று அழைக்கப்படும் பகுதிகள் எல்லாம் முதல் உலகப்போருக்கு முன் உதுமானியப் பேரரசு (Ottoman Empire) கட்டுப்பாட்டில் இருந்தது.
அப்போது இங்கு அரபு இஸ்லாமியர்கள் அதிக அளவிலும், யூதர்கள், கிறிஸ்துவர்கள் மிக குறைவான அளவிலும் இருந்தனர். அதன்பின் முதல் உலகப் போர் முடிந்து, உதுமானியப் பேரரசு வீழ்ந்த பின் இந்த பகுதி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

மோதல் எப்படி தொடங்கியது? : அப்போதில் இருந்தே இந்த பகுதி பலாஸ்தீனம் என்றுதான் அழைக்கப்பட்டது. இந்த பகுதியை யூதர்கள் தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக பூமியாக கருதினார்கள். இதனால் யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு குடியேற தொடங்கினார்கள்.
அப்போதே யூதர்கள் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சின்ன சின்ன நில தகராறுகள் ஏற்பட்டது. இங்கு ஒரு வகையில் யூதர்களின் குடியேற்றத்திற்கு பிரிட்டிஷ் மறைமுகமாக ஆதரவு அளித்தது.
இதனால் பல நூறு வருடங்களாக அங்கு வசித்து வந்த இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளை இழக்க நேரிட்டது. இதை தொடர்ந்துதான் இரண்டாம் உலகப் போர் வந்தது. இதில் யூதர்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்ட நிலையில், இவர்களுக்காக தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு, பாலஸ்தீனம் குறி வைக்கப்பட்டது.
பாலஸ்தீனம் 1947ல் ஐநா மூலம் மொத்தமாக பங்கு போடப்பட்டது. ஐநாவின் திட்டப்படி பாலஸ்தீனம், அரபு மற்றும் யூதர்களின் கட்டுப்பாட்டில் இரண்டு நாடாக பிரிக்கப்படும். பாலஸ்தீன மக்களுக்கு 50%க்கும் குறைவான நிலம் ஒதுக்கப்படும்.
அமெரிக்கா தலையீடு: ஜெருசலேம் சர்வதேச கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஐநா கூறியது. ஆனால் அங்கு பூர்வீகமாக இருந்த பாலஸ்தீன மக்கள் இதை ஏற்கவில்லை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக இதை அவர்கள் கருதினார்கள்.
ஆனால் யூதர்கள் இதை ஏற்றுக்கொண்டு இஸ்ரேல் என்ற தனி நாட்டை அறிவித்தனர். பாலஸ்தீனம் இதை ஏற்றுக்கொள்ள நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் 1948ல் போருக்கு சென்றது. 1 வருடம் நடந்த போரில் இஸ்ரேல் வென்றது.
இந்த போர்தான் மொத்தமாக அங்கு நிலைமையை மாற்றியது. இந்த போரில் வென்ற இஸ்ரேல், ஐநா கொடுத்ததை விட கூடுதல் நிலங்களை பாலஸ்தீனத்தில் இருந்து போருக்கு பின் அபகரித்தது. 70%க்கும் அதிகமான நிலம் பாலஸ்தீனத்திடம் இருந்து பறிபோனது. இதில் பாலஸ்தீனத்துடன் இணைந்து போரிட்ட அரபு நாடுகளான ஜோர்டன் வெஸ்ட் பேங்க் பகுதியை கைப்பற்றியது. எகிப்து காஸாவை கைப்பற்றியது. ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் - ஜோர்டன் இடையே பங்கிடப்பட்டது.

போர் மூண்டது: அப்போது பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பை தொடங்கிய இஸ்ரேல் அதன்பின் வரிசையாக தினமும் ஆக்கிரமிப்பை செய்து வந்தது. இதனால் பாலஸ்தீன மக்கள் பல லட்சம் பேர் அகதிகளாக மாறினார்கள். யூதர்கள் பல லட்சம் பேர் பாலஸ்தீன நிலங்கள், வீடுகளை ஆக்கிரமித்தனர். இப்படி ஆக்கிரமிப்பு செல்ல செல்ல அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மீண்டும் மோதல் தீவிரம் ஆனது. இதனால் 1967ல் மீண்டும் போர் மூண்டது.
இந்த இரண்டாவது போரிலும் இஸ்ரேல் வென்றது. இந்த 6 நாள் போரில் இஸ்ரேல் கட்டுப்பாட்டிற்குள் காசா, வெஸ்ட் பேங்க் இரண்டும் வந்தது. ஆனால் இங்கு பாலஸ்தீன மக்கள் அதிகம் இருந்தனர். இந்த நிலையில் கிழக்கு ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் அதிகாரபூர்வமாக தங்களுடன் இணைந்தது. 1987, 1993 மோதல் என்று வரிசையாக பல்வேறு மோதல்களில் இஸ்ரேல் பாலஸ்தீன நிலங்களை கைப்பற்றியது.
ஹமாஸ்: அதன்பின் 1995ல் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத் மற்றும் இஸ்ரேல் பிரதமர் ரபின் இடையே இரண்டு நாட்டு கொள்கைக்கான ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் செய்யப்படவில்லை. 1995ல் செய்யப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தத்தில் வெஸ்ட் பேங்க், பாலஸ்தீனத்தின் பெரும்பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்தது.
பாலஸ்தீன விடுதலையில் பிஎல்ஓ இருந்தாலும் ஆயுதம் தாங்கிய அமைப்பான ஹமாஸ் படையும் காசாவில் தோன்றிரியது. அதன்பின் 2000-2005 வரை காஸாவிலும், ஜெருசலேமிலும் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் 2005ல் காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது. காஸா ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ளது. ஆனால் காஸாவின் அனைத்து எல்லைகளும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது.
சீனா: இஸ்ரேல் பாலத்தீன போரில் இத்தனை காலம் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் சீனா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது.
பாலஸ்தீன நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் சீனா சென்றுள்ளார். 3 நாள் பயணமாக சென்ற அவருக்கு ஜி ஜின்பிங் மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துள்ளார். பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் பாலஸ்தீனத் தலைவருக்கு முழு ராணுவ மரியாதையுடன் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாலஸ்தீனத்தின் கோரிக்கைளை செவி மடுப்போம், அவர்களின் எண்ணங்கள் நிறைவேற உடன் நிற்போம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிரடியாக அறிவித்துள்ளார். பாலஸ்தீனத்திற்கு சர்வதேச உலக நாடுகள் எதுவும் இத்தனை காலம் பெரிதாக நேரடி ஆதரவு கொடுக்காத நிலையில் சீனா இப்படி ஆதரவு கொடுத்து இருப்பது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications