தீவிரவாதி ரிஸ்வானின் “ஐ போன்” பாஸ்வேர்ட்டை உடைத்தது எஃப்.பி.ஐ - அச்சத்தில் ஆப்பிள் வாடிக்கையாளர்கள்!
நியூயார்க்:அமெரிக்காவில் பலியான தீவிரவாதியின் ஆப்பிள் ஐபோனுக்குள் அந்நிறுவன உதவியில்லாமலேயே எஃப்.பி.ஐ ஊடுருவியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்துடனான அமெரிக்க அரசின் சட்ட ரீதியான மோதல் முடிவுக்கு வந்தது. எனினும் இது புதிய சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் பெர்னார்டினோ நகரில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ரிஸ்வான் பரூக், தஷ்பீன் மாலிக் தம்பதியினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர். 22 பேர் காயமடைந்தனர்.

போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவரும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பரூக்கின் ஆப்பிள் 5 சி ஐபோனில் உள்ள தகவல்களை பெற அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ முயற்சி செய்தது.
ஆனால் ஐபோனுக்குள் ஊடுருவுவது சிரமமாக இருந்ததுடன் தகவல்கள் அழியும் அபாயம் உள்ளதாகவும் கருதிய எஃப்.பி.ஐ ஆப்பிள் நிறுவன உதவியை நாடியது. ஆனால் தங்கள் தயாரிப்பின் பாதுகாப்பு கருதி ஐபோனுக்குள் ஊடுருவும் சாப்ட்வேரை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் மறுத்து விட்டது. ஆப்பிள் நிறுவனத்துக்கு பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் ஆதரவு தந்தன. இதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பயங்கரவாதியின் ஐபோனுக்குள் ஊடுருவ ஆப்பிள் நிறுவனத்தின் உதவி தேவையில்லை என எஃப்.பி.ஐ அறிவித்துள்ளது. மேலும் ரிஸ்வானின் 5 சி ஐபோனில் வெற்றிகரமாக ஊடுருவி தகவல்கள் பத்திரமாக பெறப்பட்டதாகவும், அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருதாகவும் எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்துடனான அமெரிக்க அரசின் சட்ட மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு நிறைந்த ஆப்பிள் ஐபோன்களில் அந்நிறுவன உதவியின்றியே அமெரிக்க அரசு ஊடுருவியது ஆப்பிள் பயன்பாட்டாளர்களிடையே அதன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications