குடிபோதையில் “டிரைவிங்” - ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெர் கைது
லண்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரரான ஜேம்ஸ் பால்க்னெர் குடி போதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெர். உலக கோப்பை போட்டியில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான இவர் தற்போது இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அணியான லங்காஷையர் கவுண்டி அணிக்காக 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், பால்க்னெர் அங்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரது ரத்த பரிசோதனையில் மது அருந்தியது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பால்க்னெரை மான்செஸ்டர் போலீசார் கைது செய்தனர்.
அங்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவரது ரத்தம் 2 முறை பரிசோதிக்கப்பட்டு அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பால்க்னெரை மான்செஸ்டர் போலீசார் கைது செய்துள்ளார். இதனையடுத்து ஒரு நாள் இரவு முழுக்க அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் பால்க்னெர் ஜாமீனில் விடுதலையானார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் மீதான வழக்கு வருகிற 21 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அவர் அன்று மான்செஸ்டர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் இச்சம்பவம் குறித்து அவர் மீது விசராணை நடத்தும் என்றும் கூறப்படுகிறது.