ஜப்பானில் பயங்கரம்.. கத்திக்குத்து+ மர்ம கெமிக்கல் வீச்சு.. 14 பேர் காயம்.. அலறி துடித்த பொதுமக்கள்
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் தொழிற்சாலை ஒன்றில் மர்ம நபர் மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளார். அங்கிருந்தவர்களை சரமாரியாகக் கத்தியால் குத்திய அவர், கெமிக்கல் திரவத்தையும் தெளித்துத் தாக்கியுள்ளார். இதில் 14 பேர் படுகாயமடைந்தனர்.
உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்று ஜப்பான். அங்குச் சிறு வயதில் இருந்தே பொதுமக்களுக்கு ஒழுக்கமும் பெரியவர்களை மதிக்கும் பண்பும் கற்றுத் தரப்படுவதால் பெரிய வன்முறைச் சம்பவங்கள் அரிதாகவே நடக்கும்.

அப்படி அமைதியான நாடாக இருக்கும் ஜப்பானில் இன்று மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஜப்பானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இந்தப் பயங்கரக் கத்திக்குத்துத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் மொத்தம் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது, அடையாளம் தெரியாத மர்ம கெமிக்கல் தெளிக்கப்பட்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு ஜப்பானில் உள்ள மிஷிமா பகுதியில் இருக்கும் ஒரு ரப்பர் தொழிற்சாலையில் இந்தக் கத்திக் குத்து தாக்குதல் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications