கொரோனாவை கட்டுப்படுத்த பெரும் பங்கு வகித்து வரும் ஜப்பான் மருந்து.. சீனா சொன்ன சூப்பர் தகவல்
பெய்ஜிங்: FUJIFILM நிறுவனத்தின் துணை நிறுவனம் தயாரித்த ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Favipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 8968 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சீனாவில் தான் அதிகம் பேர் உயிரிழந்தனர். சீன சுகாதார அமைச்சகம் வெளியிட்ட கணக்குப்படி சீனாவில் இதுவரை 80,928, பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 3245 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிந்துள்ளனர். சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றிலும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 219265 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் சுமார் 3000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் 475 பேர் பலியாகி உள்ளனர்,

இந்தியாவில் 170 ஆக உயர்வு
ஐரோப்பா கண்டத்தில் உள்ள 27 நாடுகளும் கொரோனா பாதிப்பால் நிலைகுலைந்து போய் உள்ளன. உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கையை கொரோனா வைரஸ் முடக்கி உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொடர்பாக நாட்டு மக்களுக்கு இன்றிரவு பிரதமர் மோடி உரையாற்றுவதாக அறிவித்துள்ளார்.

மரண விகிதம் சரிவு
உலகமே கொரோவிற்கு மருந்து கண்டுபிடிக்க கடுமையாக போராடி வருகிறது. சீனா மிகப்பெரியஅளவில் போராடி கொரோனா பரவுவதை தடுத்து நிறுத்தி உள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கண்ட நாடான சீனா 80 ஆயிரம் பேருக்கு பரவிய போதிலும் மரண விகிதம் 5 சதவீதம் என்ற அளவில் குறைத்துள்ளது. அதாவது 3245 பேர்தான்இதுவரை இறந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் சீனாவின் மருத்துவ முறையை சொல்கிறார்கள்.

சீனா அதிரடி
சீனா அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய முறையில் சிகிச்சை அளித்து வருகிறது. மேலும் கொரானா பரவுவதை தடுக்க தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு விஷயங்களை செய்தது. அந்த நாட்டில் யார் யார் கொரோனா பாதிப்பில் உள்ளார்கள், எங்கு செல்கிறார்கள், எங்கு யார் யாருக்கு கொரோனா உள்ளது என்பதை அறிய வசதிகளை ஏற்படுத்தியது.

ஜப்பான் மருந்து
அத்துடன் ஒரே வாரத்தில் மிகப்பெரிய மருத்துவமனையை கட்டி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்தது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய சிகிச்சையை அளித்தது. இந்நிலையில், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Fabipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனா தகவல்
FUJIFILM நிறுவனத்தின் துணை நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இம்மருந்தால் வுகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் குணமடைந்திருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரானோவால் நுரையிரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் Favipiravir மருந்து கொடுக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications