மப்பு ஜாஸ்தியாகி தவளையைப் பிடித்து நாவால் வருடிய குடிகாரர்
இன்டியானா, அமெரிக்கா: அமெரிக்காவில் நன்கு குடித்து விட்டு பப் ஒன்றின் கார் பார்க்கிங்குக்குள் புகுந்த நபர் டான்ஸ் ஆடியபடி, தரையில் இருந்த தவளையைப் பிடித்து அதை தனது நாவால் நக்கியுள்ளார். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து அந்த நபரிடமிருந்து தவளையை மீட்டு கீழே விட்டு விட்டு அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அந்த நபரின் பெயர் ரிச்சர்ட் முல்லின்ஸ். 41 வயதாகும் அவர் லாபோர்ட் என்ற இட்தில் உள்ள ஜேஜே சைட் அவுட் பார் அன்ட் சில் என்ற கிளப்புக்குப் போனார். ஆனால் பாருக்குள் அவர் அனுமதியில்லாமல் புகுந்ததாக கூறப்படுகிறது. பிறகு நன்றாக குடித்து விட்டு குடிபோதையில் கார் பார்க்கிங் பகுதிக்குள் சென்றார்.
அங்கு போய் தன் இஷ்டத்திற்கு டான்ஸ் ஆடினார். பின்னர் தரையில் ஓடிய தவளை ஒன்றைப் பிடித்து நக்கத் தொடங்கி விட்டார். தவளை அவரிடமிருந்து விடுபட முடியாமல் தவித்தது. சிலர் இதைப் பார்த்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்த அந்த நபரிடமிருந்து தவளையைப் பறித்து கீழே விட்டு விட்டு இதுபோல நடக்கக் கூடாது என்று எச்சரித்துச் சென்றனர்.
ஆனால் போலீஸார் அந்தப் பக்கம் போனதும் மறுபடியும் ஒரு தவளையைப் பிடித்து நக்க ஆரம்பித்தார் ரிச்சர்ட். இதையடுத்து மீண்டும் வந்த போலீஸார் இந்த முறை அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றார்.












Click it and Unblock the Notifications