சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதித்தவர்... மரணவாசலில் இருந்து மயிரிழையில் தப்பிய வீடியோ!
தைபேயி: தைவான் உயிரியல் பூங்காவில் சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதித்தவர் மரணவாசலில் இருந்து மயிரிழையில் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாக பரவி வருகிறது.
தைவான் நாட்டின் தைபேயி உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென குதித்துவிட்டார்.
அவரை வேட்டையாடுவதற்கான முயற்சியில் சிங்கங்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. தன்னைச் சுற்றி ஒரு விபரீதம் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தும் உணாரதவராக அந்த நபரும் நடந்து கொள்கிறார்.
மரணத்தின் வாசலில் நின்ற அந்த மனநிலை பாதிக்கப்பட்டவரை சிங்கங்களிடம் இருந்து மீட்பதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர் உயிரியல் பூங்கா ஊழியர்கள். இதனால் சிங்கங்கள் விலகிக் கொள்ள அந்த மனநிலை பாதித்தவர் உயிரோடு மீட்கப்பட்டார்.
இந்த வீடியோ காட்சிதான் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக ஓடுகிறது.