இந்திய அழகி உள்பட 126 பேரைத் தோற்கடித்து உலக அழகிப் பட்டம் வென்ற மிஸ் பிலிப்பைன்ஸ்
பாலி: மிஸ் பிலிப்பைன்ஸ் மெகன் யங் 2013ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
உலக அழகி போட்டி இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்றது. இந்த ஆண்டு போட்டியில் வழக்கமாக நடக்கும் பிகினி ரவுண்ட் இல்லை. இருப்பினும் உலக அழகி போட்டிக்கு இந்தோனேசியாவில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு அழகிகள் கலந்து கொண்டனர். உலக அழகியைத் தேர்வு செய்யும் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.
மிஸ் பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் அழகியான மிஸ் யங் 2013ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார். அவர் 126 அழகிகளை தோற்கடித்துள்ளார். இரண்டாவது இடத்தை பிரான்ஸ் அழகி மரின் லார்பெலின் மற்றும் மூன்றாவது இடத்தை கானா அழகி காரன்சார் நா ஒகைலேவும் பெற்றனர்.
அமெரிக்காவில் பிறந்து
யங் அமெரிக்காவில் பிறந்தவர். அவருக்கு 10 வயது இருக்கையில் அவரது பெற்றோர் பிலிப்பைன்ஸில் குடியேறினர்.
டிவி ஷோக்கள்
டிஜிட்டல் பிலிம் மேக்கிங் படித்துள்ள யங் படங்கள் மற்றும் டிவி ஷோக்களில் வந்துள்ளார்.
கடின உழைப்பு
பிலிப்பைன்ஸில் என்ன தான் பிரச்சனை நடந்தாலும் தனது நாட்டு மக்கள் கடின உழைப்பாளிகள், மற்றவர்களுக்கு உதவும் குணம் உள்ளவர்கள் என்பதை யங் உலகிற்கு உணர்த்த விரும்புகிறார்.
மிஸ் இந்தியா
இந்திய அழகி நவ்னீத் கௌர் தில்லன் உலக அழகி பட்டத்தை நழுவவிட்டுள்ளார்.