அட்ட சோம்பேறிகள் 5 பேரும்.. அவர்களுக்காக ஒரு ஒலிம்பிக்ஸும்...!
போட்கோரிகா, மான்டிநீக்ரோ: ஐந்து சோம்பேறிகள் பங்கேற்கும் ஒரு ஒலிம்பிக் போட்டி நடக்கிறது.. உங்களுக்கு ஏதாவது தெரியுமா... தெரிஞ்சுக்கோங்க..!
இந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பெயர் லேஸி ஒலிம்பிக்ஸ்.. அதாவது சோம்பேறி ஒலிம்பிக்ஸ். மான்டிநீக்ரோ நாட்டில் உள்ள பிரெஸ்னா என்ற கிராமத்தில்தான் இந்த கூத்து நடக்கிறது.
செர்பியா, போஸ்னியா - ஹெர்ஸகோவினா மற்றும் மான்டிநீக்ரோ நாடுகளைச் சேர்ந்த ஐந்து பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர். உலகிலேயே மிகவும் சோம்பேறிகள் என்ற பட்டத்திற்காக இவர்கள் போட்டியில் குதித்துள்ளனராம்.

அட்ட சோம்பேறிகளுக்காக
வருடா வருடம் இந்தப் போட்டியை கடமையாக நடத்துகிறார்கள். இதில் மிகவும் சோம்பேறி என்ற பட்டத்தைப் பெறும் நபருக்கு 332 டாலர் பரிசாக அளிக்கப்படுமாம். போட்டிக்கான விதிமுறைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள். கேளுங்க அந்தக் கூத்தை...

எழுந்து நிற்கக் கூடாது
போட்டியாளர்கள் யாரும் எழுந்து நிற்கக் கூடாது. டாய்லெட்டுக்குப் போகக் கூடாது. எதுவாக இருந்தாலும் தவழ்ந்தபடியோ, உட்கார்ந்து ஜம்ப் செய்தபடியோதான் போக வேண்டும்.

தம் அடிக்கலாம், குடிக்கலாம்
தம் அடிக்கலாம், குடிக்கலாம், போனில் பேசலாம், புத்தகம் படிக்கலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எழுந்து மட்டும் நிற்கக் கூடாது.

37 மணி நேரம் இப்படியே
37 மணி நேரம் இதேபோல படுத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவரான மார்க்கோ ஜுரோவிக் இந்த முறையும் போட்டிக்கு வந்துள்ளார்.

டைனிங் ஹால்தான் கிரவுண்டு
வழக்கமாக இதை அவுட்டோரில்தான் நடத்துவார்கள். இந்த முறை வெளியில் வானிலை மோசமாக இருப்பதால் வீட்டுக்குள் மாற்றி விட்டனர். வீட்டு டைனிங் ஹாலில்தான் போட்டியாளர்கள் படுத்துக் கிடக்கிறார்கள்.

பேசிக்கலி பெரிய சோம்பேறிங்க பாஸ்
இந்தப் போட்டிக்கு நடுவராக இருப்பவர் இவிகா டிரசோவிக். இதுகுறித்து அவர் கூறுகையில் மான்டிநீக்ரோ மக்கள் பேசிக்கலி பெரிய சோம்பேறிகள். எனவேதான் இந்தப் போட்டியை நடத்தும் யோசினை வந்தது என்றார்.

இலக்கியத்திலும் இருக்காமே
மான்டிநீக்ரோ மக்கள் உண்மையிலேயே பெரிய சோம்பேறிகள்தானாம். அதுகுறித்து அவர்களது நாட்டு இலக்கியங்களிலும் கூட நிறைய இடம் பெற்றிருக்கிறதாம்...!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications