இலங்கை போர்க்குற்ற விசாரணையில் 'காமன்வெல்த் நீதிபதிகள்': ஐ.நா.வில் யு.எஸ். புதிய தீர்மானம் தாக்கல்!
ஜெனீவா: இலங்கை நடத்தும் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்குப் பதிலாக காமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்ற வாசகத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா புதிய தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது கூட்டத்தில் மனித உரிமைகள் ஆணையர் , 19 பக்க அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றிருந்தது; மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருந்தன; இதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட ஒரு கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

இந்த நிலையில் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா ஒருவரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்திருந்தது. அதில் இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதற்கு இலங்கை மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தரப்புடன் இலங்கை குழு தொடர்ச்சியாக விவாதங்களை நடத்தியது. இறுதியாக திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா இன்று தாக்கல் செய்துள்ளது.
அதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்த கலப்பு நீதிமன்றம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் இலங்கை அரசாங்கமே உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும்; இந்த விசாரணையில் காமன்வெல்த் நாடுகள் மற்றும் சர்வதேச நீதிபதிகள் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்த புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு 30-ந் தேதியன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
-
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications