அமெரிக்காவிற்கு பதிலடி.. அணு ஆயுத பலத்தை அதிகரிக்க கிம் முடிவு.. மிக தீவிரமாக தயாராகும் வடகொரியா!
பியாங்யாங்: வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை உயர்த்தும் வகையில் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க போவதாக அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் நேற்று முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
Recommended Video
கடந்த மாதம் காணாமல் போய் திரும்பி வந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் தற்போது முதல் முறையாக அதிகாரபூர்வ மீட்டிங் ஒன்றை நடத்தி உள்ளார். அந்நாட்டு ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உடன் மீட்டிங் ஒன்றை அவர் நடத்தி உள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் கிம் ஜோங் உன் காணாமல் போனார். அவர் இறந்துவிட்டதாக, மூளை சாவு அடைந்துவிட்டதாக செய்திகள் பரவிய வண்ணமிருந்தது. அதன்பின் அவர் மீண்டு வந்தார்.

மீட்டிங் வந்தார்
வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்தார். அதன்பின் அவர் நேற்று முக்கியமான ராணுவ மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டார். வடகொரியா மத்திய ராணுவ கமிஷன் நடத்திய மீட்டிங்கில் அவர் கலந்து கொண்டார். வடகொரியாவின் பாதுகாப்பை உயர்த்துவது தொடர்பாக இவர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

அணு ஆயுதம்
வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை உயர்த்தும் வகையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. வடகொரியா கடந்த 8 மாதங்களாக பெரிதாக அணு ஆயுத ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவில்லை. கடந்த இரண்டு மாதம் முன் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. அதன்பின் அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை எதையும் செய்யவில்லை. அதன்பின் தற்போதுதான் அங்கு அணு ஆயுதம் குறித்த பேச்சு எழுந்துள்ளது.

அமெரிக்கா அதிர்ச்சி
அணு ஆயுத பலத்தை அதிகப்படுத்த வடகொரியா முடிவு செய்துள்ளது. பெரிய தாக்குதலுக்கு தயார் ஆகும் வகையில் வடகொரியா இந்த முடிவை எடுத்து இருக்கிறது. அமெரிக்காவுடன் வடகொரியா அணு ஆயுத ஒப்பந்தம் செய்யும் நிலையில் இருந்தது. அதாவது மொத்தமாக அணு ஆயுதங்களை கைவிடும் வகையில் ஒப்பந்தம் செய்ய இருந்தது. இதனால் அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு நடத்தினார்கள்.

முழுதாக முடியவில்லை
ஆனால் இந்த ஒப்பந்தம் முடியும் முன் இப்படி வடகொரியா முடிவை எடுத்துள்ளது. அமெரிக்காவை இந்த முடிவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இப்படி செய்வதாக கூறுகிறார்கள். அமெரிக்க பாதுகாப்பு படை மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட ஆலோசனை கடந்த மே 15ம் தேதியே நடந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.

பதிலடி கொடுக்க திட்டம்
வெள்ளை மாளிகையில் பென்டகன் அதிகாரிகள், சில ராணுவ மேஜர்கள் முன்னிலையில் இந்த ஆலோசனை நடந்துள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கவே வடகொரியா இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறுகிறார்கள். அணு ஆயுத சோதனையோடு பலமான ஆயுதங்களை உருவாக்கவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது அணு ஆயுத போராக இருக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications