"குண்டு ஒன்னு வச்சிருக்கேன்"... விளையாட்டு காட்டிய டாக்டருக்கு ரூ. 55 லட்சம் ஃபைன்!!

வெனிசுலா நாட்டில் மருத்துவராக உள்ளவர் மானுவேல் அல்வராடோ (60). இவர் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி பகோடா நகருக்குச் செல்லும் விமானத்திற்காக அமெரிக்காவின் மியாமி இண்டர்நேஷனல் விமானநிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது, மானுவேலிடம் பாதுகாப்பு அதிகார்கள், விமான நிலைய அதிகாரிகள் வழக்கம் போல் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொஞ்சம் விளையாட்டுத் தனமாக விசாரணையில் பதிலளித்துள்ளார் டாக்டர். அதாவது தன்னிடம் உள்ள லக்கேஜில் சி-4 எனப்படும் வெடிபொருள்கள் இருப்பதாக அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார். பின்னர், தான் விளையாட்டுக்கு அவ்வாறு கூறியதாக டாக்டர் விளக்கமும் அளித்துள்ளார்.
ஆனால், அதனை நம்பாத அதிகாரிகள், உடனடியாக டாக்டரின் உடைமைகளை சோதனை இடத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர் இருந்த பகுதியிலும் அனைவரையும் வெளியேற்றினர் பாதுகாப்பு அதிகாரிகள். அந்தப் பகுதிக்கும் சீல் வைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சோதனைகளுக்குப் பின்னர் டாக்டர் சொன்னது பொய் என்பது உறுதியானது.
ஆனபோதும், வெடிகுண்டு புரளியை பரப்பி வீண் பரபரப்பை உண்டாக்கியதற்காக டாக்டருக்கு 90 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 55 லட்சம் ஆகும்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவில் வெடிண்டுகள் இருப்பதாக புரளி கிளப்பினால் அபராதத்தைத் தீட்டி விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications