ஜமாத் உத் தவாவை தடை செய்துட்டோம்.. முடக்கிட்டோம்.. சொல்கிறது பாக்.. நம்பிட்டோம்ணே!
இஸ்லாமாபாத்: இந்தியாவில் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு மூளையாக திகழும் ஹபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத் உத் தவா அமைப்பை தடை செய்து அதன் அறக்கட்டறை பிரிவையும் முடக்கி விட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் இது வெறும் கண்துடைப்பு என்பது பாகிஸ்தானுக்கே நன்றாக தெரியும் என்பதால் இதை நம்ப இந்தியா தயாராக இல்லை.
ஏற்கனவே இந்த அமைப்பு பல்வேறு பெயர்களில் இயங்கி வந்தது. ஒவ்வொரு முறையும் இந்தியாவிடமிருந்து நெருக்கடி வரும்போதெல்லாம் அதை பாகிஸ்தான் தடை செய்வது போல நடிக்கும். அந்த அமைப்பும் வேறு பெயருக்கு மாறி வழக்கம் போல செயல்படும்.

அந்த வகையில் இப்போது காஷ்மீரில் நடந்துள்ள கொடிய பயங்கரவாத தாக்குல் சம்பவத்திற்குப் பிறகு ஜமாத் உத் தவா அமைப்பையும் அதன் அறக்கட்டளையான பாலா இ இன்சானியாத் பவுண்டேஷனையும் தடை செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது உலக அளவில் எழுந்துள்ள கடும் எதிர்ப்புகளைத் தணிக்கும் வகையிலான கண் துடைப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம். இரு அமைப்புகளையும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹபீஸ் சயீத் ஒரு கில்லாடி தீவிரவாத தலைவர் ஆவார். இந்தியாவில் தீவீரவாத செயல்களுக்கு பண உதவி, ஆட்களை மூளைச்சலவை செய்து அனுப்புவது ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு இவரே மூல காரணம் ஆவார். பாகிஸ்தானில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகள், தலைவர்கள், அமைப்புகள் இவருக்கு ஆதரவாக உள்ளன. எனவே இந்த தடை என்பதும் கூட செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.
ஜமாத் உத் தவா அமைப்பின் கீழ் 300 செமினரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ஒரு பதிப்பகம், ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை உள்ளன. இந்த இரு அமைப்புகளிலும் சேர்த்து மொத்தமாக 50,000 உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள், சம்பளத்திற்கு வேலை பார்ப்போர் உள்ளனராம்.
இந்த அமைப்பு முன்பு லஷ்கர் இ தொய்பா என்ற பெயரில் இயங்கி வந்தது. ஆனால் மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்த அமைப்பு சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டது. இதையடுத்து ஜமாத் உத் தவா என்ற முகமூடிக்கு மாறினார் ஹபீஸ். சயீத்தை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்திருப்பதும் நினைவிருக்கலாம். இதையடுத்து இவரைக் காப்பாற்ற கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது பாகிஸ்தான் அரசு. பின்னர் 2017ம் ஆண்டு இவரை விடுவித்தது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications