சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்
சியோல்: தென்கொரியாவில் இன்று நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடிக்கு ' சியோல் அமைதிப் பரிசு' வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த விருதைப் பெறும் 14-வது நபராக மோடி திகழ்கிறார்.
கடந்தாண்டு அக்டோபரில் பிரதமர் மோடிக்கு 'சியோல் அமைதிப் பரிசு' அறிவிக்கப்பட்டது. ஏழை- பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்ததற்காகவும் உலக அமைதிக்காகப் பங்காற்றியதற்காகவும் சியோல் அமைதி விருது வழங்கப்படுவதாக தென்கொரியா அரசு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி சியோல் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், யோன்சி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடியும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பங்கேற்றனர். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில், மோடிக்கு ' சியோல் அமைதிப் பரிசு' வழங்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி பேசினார். அப்போது, 1988 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தீம் பாடலின் பகுதியை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, கையோடு கை சேர்ந்து, நல்ல நாள் நாளை பிறக்கும் என்று நம்புவோம் என்றும், சிறந்த வாழ்வு இடமாக நாம் இந்த உலகத்தை உருவாக்வோம் என்றும் கூறினார்.
மேலும், தீவிரவாத நெட்வொர்க்கை முற்றிலுமாக ஒழிக்க நேரம் வந்துவிட்டது என்றும் அவ்வாறு செய்வதன் மூலம் நாம் வெறுப்பை வேரோடு அழித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்றார்.
சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நினைவாக சியோல் அமைதிக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது . 1990- ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, முந்தைய ஆண்டுகளில் ஐ.நா. முன்னாள் செயலர் கோபி அன்னன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications