சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்
சியோல்: தென்கொரியாவில் இன்று நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடிக்கு ' சியோல் அமைதிப் பரிசு' வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த விருதைப் பெறும் 14-வது நபராக மோடி திகழ்கிறார்.
கடந்தாண்டு அக்டோபரில் பிரதமர் மோடிக்கு 'சியோல் அமைதிப் பரிசு' அறிவிக்கப்பட்டது. ஏழை- பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்ததற்காகவும் உலக அமைதிக்காகப் பங்காற்றியதற்காகவும் சியோல் அமைதி விருது வழங்கப்படுவதாக தென்கொரியா அரசு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி சியோல் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், யோன்சி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடியும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பங்கேற்றனர். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில், மோடிக்கு ' சியோல் அமைதிப் பரிசு' வழங்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி பேசினார். அப்போது, 1988 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தீம் பாடலின் பகுதியை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, கையோடு கை சேர்ந்து, நல்ல நாள் நாளை பிறக்கும் என்று நம்புவோம் என்றும், சிறந்த வாழ்வு இடமாக நாம் இந்த உலகத்தை உருவாக்வோம் என்றும் கூறினார்.
மேலும், தீவிரவாத நெட்வொர்க்கை முற்றிலுமாக ஒழிக்க நேரம் வந்துவிட்டது என்றும் அவ்வாறு செய்வதன் மூலம் நாம் வெறுப்பை வேரோடு அழித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்றார்.
சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நினைவாக சியோல் அமைதிக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது . 1990- ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, முந்தைய ஆண்டுகளில் ஐ.நா. முன்னாள் செயலர் கோபி அன்னன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications