போலீஸ் உள்பட குடும்பத்தார் 5 பேர் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பயங்கரம்
நியூயார்க்: அமெரிக்காவில் ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் குடும்பத்துடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள லிண்டன் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார் போலீஸ் அதிகாரி ஜோஷூவா போரென் . இவர் கடந்த வியாழக்கிழமை பணிக்கு வராததால் சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரது வீட்டில் போய் பார்த்தனர். அப்போது ஜோஷூவா துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். அவருடன் அரவது மனைவி கெல்லியும், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாரும் இறந்து கிடந்தது தெரியவந்தனர். இதனால் போலீஸ் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜோஷூவா மற்றும் அவரது குடும்பத்தினரை யாரேனும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனரா அல்லது அவரே, தன் குடும்பத்தை கொலை செய்துவிட்டு பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.