பின்னாடியே வந்த கொக்கு.. கடுப்பான காண்டாமிருகம்... அயய்ய்ய்யே... அதுக்காக இப்படியா பண்ணும்!
நைரோபி: நைரோபியில் ஒரு இடத்தில் மேய்ந்து கொண்டிருந்த காண்டாமிருகம் அதன் பின்புறம் இருந்த கொக்கின் மீது சிறுநீர் கழித்ததும் அதில் அந்த கொக்கு உல்லாசமாக குளித்ததும் வைரலாகி வருகிறது.
கென்யாவில் நைரோபியில் உள்ளது தேசிய உயிரியல் பூங்கா. இந்த பூங்காவிற்கு நாகராஜ் திலகராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அவர் ஒரு ஆச்சரியமான விஷயத்தை தனது கேமராவில் படம் பிடித்தார்.
அதை சமூகவலைதளங்களிலும் பதிவிட்டு அது வைரலாகி வருகிறது. காண்டாமிருகம் ஒன்று பின்னால் நின்றிருந்த கொக்கின் மீது சிறுநீர் கழித்தது.
காண்டாமிருகம்
அதாவது தேசிய பூங்காவில் ஒரு காண்டாமிருகம் மேய்ந்து கொண்டிருக்கிறது. அப்போது அதன் பின்னால் ஒரு கொக்கு நிற்கிறது. திடீரென காண்டாமிருகத்திற்கு சிறுநீர் வந்துவிட்டது, இதனால் பீய்ச்சி அடித்தது. அப்போது கொக்கின் மீதும் பீய்ச்சி அடித்தது. அத்தனை வேகமாக அடித்த போதிலும் அந்த கொக்கு இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. ஏதோ ஷவரில் குளித்தது போல் நிற்கிறது. இந்த சம்பவம்தான் தற்போது வைரலாகி வருகிறது.
வைரல்
இதுகுறித்து அந்த புகைப்படத்தை எடுத்த நபர் கூறுகையில் இந்த புகைப்படம் எதிர்பாராதவிதமாக எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது அந்த கொக்கு அந்த இடத்தை விட்டு நகராமல் பாத்ரூம் ஷவரில் குளிப்பது போல் உற்சாகமாக குளியல் போட்டது என் ரசனையை தூண்டிவிட்டது.
கொக்கு
குறிப்பாக சொல்வதென்றால் கொக்கின் மீது சிறுநீர் கழிக்கிறோமே என காண்டாமிருகமும், தன் மீது தண்ணீர் அடிக்கப்படுகிறதே என கொக்கும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எனது மகன் காண்டாமிருகங்களையும் ஒட்டசிவிங்கிகளையும் விரும்புவார். அதனால் இந்த தேசிய பூங்காவிற்கு நாங்கள் வந்தோம் என்றார்.
பெண் காண்டாமிருகம்
பொதுவாக ஆண் காண்டாமிருகத்தின் பிறப்புறுப்பு சற்று நீண்டு வெளியே தெரியும்படி இருக்கும். அப்போதுதான் சிறுநீரை வேகமாக பின்னோக்கி அடித்து பெண் காண்டாமிருகத்தை ஈர்க்குமாம். இந்த சிறுநீர் 16 அடி தூரம் வரை செல்லுமாம். நல்ல வேளை இந்த புகைப்படத்தை எடுத்த நாகராஜ் 30 அடி தூரத்தில் நின்றிருந்தார்.