For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

By Karthikeyan
Google Oneindia Tamil News

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாகினர்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Russia: 10 killed in blast at a metro station in St Petersburg

குண்டுவெடிப்பை அடுத்து செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களூம் மூடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் லண்டனிலுள்ள இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தப் சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து அவை பாதியிலேயே முடிக்கப்பட்டது. அப்போது அங்கு 400 எம்.பி.க்கள் இருந்தனர். இந்நிலையில் ரஷ்யாவை குறிவைத்து மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
At least 10 people were killed and several injured in a blast in an underground station in St Petersburg, Russia, on Monday, said reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X