இஸ்ரேல் சிறுவர்களை கடத்தியது நாங்களே: ஹமாஸ் இயக்க மூத்த தலைவர்
காஸா: பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு காரணமான மூன்று இஸ்ரேலிய சிறுவர்களை கடத்தியது நாங்கள்தான் என்று ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலிய சிறுவர்கள் மூவர் காணாமல் போயினர். 3 வார தேடுதலுக்குப் பின்னர் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக பாலஸ்தீன சிறுவன் இஸ்ரேல் பகுதியி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த விவகாரத்தைத் தொடர்ந்துதான் காஸா மீது இஸ்ரேல் படையெடுத்து இன அழிப்பை நிகழ்த்தி வருகிறது.
ஆனால் இஸ்ரேலிய சிறார்களை கடத்தியது ஹமாஸ் இயக்கம் இல்லை என்றே கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய துருக்கியில் வாழும் ஹமாஸ் இயக்க மூத்த தலைவர் அல் அரோரி, இஸ்ரேலிய சிறுவர்களை கடத்தியது தாங்கள்தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இது ஹமாஸ் இயக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications