For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பூர் உச்சிமாநாடு: டிரம்ப், கிம் என்ன பேசுவார்கள்? - உற்றுநோக்கும் உலகம்

By BBC News தமிழ்
|

செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஒரு ''நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் செயல்முறை'' குறித்து விவாதிக்கவுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உச்சிமாநாடு
AFP
சிங்கப்பூர் உச்சிமாநாடு

மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சந்திப்பிற்காக கிம் ஜாங்-உன் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூர் வந்தடைந்தனர்.

''ஒட்டுமொத்த உலகமும் இதனை உற்று கவனித்து கொண்டிருக்கிறது'' என இந்த சந்திப்பு குறித்து கிம் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த உச்சி மாநாடு குறித்து தனக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் வருகை
Getty Images
டிரம்ப் வருகை

வட கொரியா அணுஆயுதங்களை கைவிட வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. அதே வேளையில், இதற்கு பதிலாக அமெரிக்காவிடம் வட கொரியா எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

கிம் மற்றும் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் சிங்கப்பூரில் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கி இருந்த போதிலும், அவ்விரு இடங்களும் வெகு தொலைவில் இல்லை.

செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்- வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.

வட கொரியாவின் எதிர்பார்ப்பு என்ன?

வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இரு தலைவர்களும் ஒரு ''நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் செயல்முறை'' குறித்து விவாதிப்பர் என்றும், கொரிய பிராந்தியத்தை ''அணுஆயுதமற்ற'' பிரதேசமாக மாற்றுவது, இருதரப்புக்கும் இடையேயான பரஸ்பர கவலைதரும் அம்சங்கள் ஆகியவை இந்த உச்சி மாநாட்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது இரு தரப்புக்கும் இடையேயான அணுகுமுறையில் மாற்றம் வந்துவிட்டதாக கேசிஎன்ஏ மேலும் கூறியுள்ளது.

முன்னதாக, இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சிங்கப்பூர் சென்றடைந்தார்.

விமானத்தில் இருந்து டிரம்ப் இறங்கியவுடன் அவரை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இதனிடையே, வட கொரியாவின் வெளியுறவுதுறை அமைச்சர் , பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் தனது சகோதரியான கிம்-யோ-ஜாங் ஆகியோருடன் சிங்கப்பூருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிம் சிங்கப்பூர் வந்தடைந்தார்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
''ஒட்டுமொத்த உலகமும் இதனை உற்று கவனித்து கொண்டிருக்கிறது'' என இந்த சந்திப்பு குறித்து கிம் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த உச்சி மாநாடு குறித்து தனக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X