Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அதிர்ச்சி வைத்தியம்"..வடகொரியாவுக்கு பதிலடி..8 ஏவுகணைகளை சோதனை செய்த தென் கொரியா

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Oneindia Tamil

சியோல்: வடகொரியா இன்று 8 புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளதாகத் தென் கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவும் தென் கொரியாவும் ஒன்றிணைந்து நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சியில் நான்காண்டுகளில் முதன்முறையாக, அமெரிக்கப் போர் விமானங்களை ஏந்திச் செல்லும் கப்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்குத் தீவான ஒகினாவாவுக்கு அருகே அந்த 3 நாள் பயிற்சி நடத்தப்பட்டது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் நடத்தும் கூட்டுப் பயிற்சிகள், போருக்கு ஒத்திகை பார்ப்பதற்குச் சமம் என்று வட கொரியா பலமுறை சாடியிருக்கிறது. இந்த நிலையில் வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா ஏவுகணை சோதனை


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன.

Recommended Video

    Taliban ஆட்சி செய்யும் Afghanistan ராணுவத்துக்கு India-வில் பயிற்சி? திடீர் பரபரப்பு *Politics
    கண்காணிப்பு அதிகரிப்பு

    கண்காணிப்பு அதிகரிப்பு

    நேற்று ஒரே நாளில் 8 குறுகிய தொலைவு 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளது. தலைநகர் பியாங்யாங் அருகேயுள்ள சுனான் பகுதியில் இருந்து 35 நிமிடங்களில் இந்த ஏவுகணைகள் ஏவி சோதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய கூட்டுப்படைத்தலைவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் இந்த ஏவுகணைகள் எவ்வளவு தொலைவுக்கு பறந்தன என்பதை தென் கொரிய ராணுவம் தெரிவிக்கவில்லை. ஆனால் வடகொரியா அதிகளவிலான ஏவுகணைகளை ஏவுவதால், அந்த நாட்டின் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக தெரிவித்தது.

    அதிர்ச்சி வைத்தியம்

    அதிர்ச்சி வைத்தியம்

    அமெரிக்காவின் விமானம்தாங்கி போர்க்கப்பல் ரொனால்டு ரீகன், பிலிப்பைன்ஸ் கடலில் தென்கொரியாவுடன் 3 நாள் கூட்டு போர் பயிற்சியை நடத்தி முடித்து ஒரு நாள் ஆன நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை வடகொரியா எடுத்திருப்பது அதிரவைப்பதாக அமைந்துள்ளது. தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன.

    8 ஏவுகணைகள் சோதனை

    8 ஏவுகணைகள் சோதனை

    இந்த ஏவுகணை சோதனைகளையொட்டி அதன் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தென்கொரியா பதிலடி

    தென்கொரியா பதிலடி

    அதன்படி, இன்று அதிகாலை தென் கொரியாவும் அமெரிக்காவும் தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து எட்டு நிலப்பரப்பு ஏவுகணைகளை ஏவியது என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திங்கள்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு தொடங்கி சுமார் 10 நிமிடங்களுக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் ஏவுகணைகளை சோதனைகளை நடத்தினர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+