For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நைஜீரியாவில் ஷியா முஸ்லீம்களின் பேரணியில் தற்கொலைப் படை தாக்குதல்: 21 பேர் பலி

By Karthikeyan
Google Oneindia Tamil News

டாகாசோயி: வட ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் நடத்திய பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயடைந்தனர்.

வடக்கு நைஜீரியாவின் கனோ நகரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரமாத்தில் ஷியா முஸ்லீம்களின் பேரணி நடைபெற்றது. அப்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். வெடிகுண்டுகளுடன் வந்த மர்மநபர் பேரணிக்குள் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் கூறினர்.

Suicide attack on Shia Muslim rally in Nigeria

இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். தங்கள் ஊர்வலத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக பேரணியை தலைமை தாங்கி நடத்திய முகமது தூரி கூறினார்.

மேலும், "இந்த தாக்குதல் எங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. நாடு முழுவதும் இதே நிலைமை தான் நிலவி வருகிறது." என்றும் முகமது தூரி தெரிவித்தார். இந்த தாக்குதலை சன்னி பிரிவு போராளி குழுவான போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என அவர்கள் குற்றம்சாட்டினர். பிரிவினர் நடத்தி

நைஜீரியாவில் கடந்த ஜீன் மாதம் 10 வயது சிறுமி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டவர்களை கடத்திச் செல்லும் போகோ ஹரம் தீவிரவாதிகள், பாலியல் அடிமைகளாகவும், தற்கொலைப் படைத் தாக்குதலுக்கும் உபயோகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Suicide bomb attack hits Nigeria Shia march, killed 21 people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X