தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.. 15 பேர் உடல் சிதறி உயிரிழப்பு.. சிரியாவில் கொடூரம்!
டமாஸ்கஸ்: சிரியா நாட்டின் தலைநகரில் உள்ள தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 15 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் இன்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

மார் எலியாஸ் என்பவர் தேவாலயத்திற்குள் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அங்கிருந்த ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். உள்ளூர் ஊடக தகவல்களின் படி, 15 பேர் உயிரிழந்த நிலையில் இதில் குழந்தைகளும் இறந்திருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியாளர்களும், அவசர உதவிக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் சிரியாவில் நிகழ்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். சிரியா அதிபர் அஹ்மத் அல்-ஷாரா நாடு தழுவிய கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இதற்கு மத்தியில் அங்கு தீவிரவாத அமைப்புகள் மீண்டும் தலைதூக்கக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளன. இத்தகய சூழலில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications