4 லட்சம் பேர் தவிப்பு.. மருத்துவ உதவி கிடைப்பதை தடுத்த சிரியா அரசு.. ஐநாவிடம் பொய் சொல்லி நாடகம்
சிரியாவில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதை சிரியா அரசே தடுத்து இருக்கிறது.
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதை சிரியா அரசே தடுத்து இருக்கிறது. ஆனால் ஐநாவிடம், மருத்துவ உதவிகள் கொடுக்கப்படுவதாக பொய் சொல்லி இருக்கிறது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 12 நாட்களில் மட்டும் இதுவரை 1000 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

தினமும்
இந்த போரில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. பல்வேறு கோரிக்கைகளுக்கு பின்பு இருதரப்பும் தினமும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு இருக்கிறது. அதேபோல் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தாது என்று குறிப்பிட்டு உள்ளது.

தாக்குதல் நடக்கிறது
ஆனால் தரைவழி தாக்குதல் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக தலைநகரில் இப்போதும் தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவ உதவிகள் கொண்டு சேர்ப்பதில் பெரிய அளவில் பிரச்சனை உருவாகி இருக்கிறது.

நேரம் கிடைப்பது இல்லை
அதேபோல் 5 மணி நேர போர் நிறுத்தம் என்பது போதவில்லை என்று மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர். உள்ளேசென்று பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவே நேரம் சரியாக இருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர். 2 மணி நேரத்திற்குள் எல்லா பொருளையும் கொடுத்தால்தான் திரும்பி வர முடியும் என்றுள்ளனர்.

ஏமாற்றம்
இந்த நிலையில் இந்த மருத்துவ உதவிக்கு கூட சிரியா அரசு அனுமதிப்பதில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. பல இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டு அனைவரும் திரும்ப அனுப்பப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். மக்களுக்கு பொருட்கள் கிடைக்க கூடாது என்று வேன்றுமென்றே இப்படி செய்துள்ளனர்.

ரகசிய சுரங்கம்
இதற்காக ரகசிய சுரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த சுரங்கம் வழியாக சில நாட்கள் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல்லா சுரங்கங்களையும் சிரியா அரசு மூடி இருக்கிறது.

போராளிகள் செய்யும் மோசடி
ஆனால் போராளிகள் சில சன்னி நாடுகளிடம் இருந்து உதவி பொருட்கள் வாங்குகிறார்கள். ஆனால் போராளிகள் அதை மிகவும் அதிக பணம் கொடுத்தால் மட்டுமே மக்களுக்கு கொடுக்கிறார்கள் இதனால் எந்த விதத்திலும் மக்களுக்கு உதவிப் பொருட்கள் சென்று சேர்வதில்லை.












Click it and Unblock the Notifications