Taliban: மனைவியை கணவர்கள் அடிப்பது தப்பு இல்லை.. சட்டப்பூர்வமாக்கும் தாலிபான்கள்!
காபூல்: குடும்ப சண்டையின் பொது மனைவி மற்றும் குழந்தைகளை ஆண்கள் உடல் ரீதியாக அடிக்கலாம் என்றும், ஆனால் எலும்புகள் உடையும் அளவிற்கோ, திறந்தவெளி காயங்கள் ஏற்படும் அளவுக்கோ தாக்கக் கூடாது என்ற ஆப்கானிஸ்தானில் புதிய சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்து இஸ்லாமிய அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்தே அங்கு கடுமையான சட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

மனைவியை கணவர்கள் அடிக்கலாம்
குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடப்பதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதிலும் பெண்கள் உயர் கல்வி கற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான், கணவன்மார்கள் மனைவியை வீட்டில் அடிப்பது சட்டப்பூர்வமாக்கியுள்ளது தாலிபான் அரசு.
குடும்ப சண்டையின் பொது மனைவி மற்றும் குழந்தைகளை ஆண்கள் உடல் ரீதியாக அடிக்கலாம் என்றும், ஆனால் எலும்புகள் உடையும் அளவிற்கோ, திறந்தவெளி காயங்கள் ஏற்படும் அளவுக்கோ தாக்கக் கூடாது என்ற புதிய சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்து இஸ்லாமிய அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்
ஒருவேளை மனைவியை அடித்ததில் அவருக்கு கண்ணுக்கு தெரியும் படியான காயங்கள் ஏற்பட்டு இருந்தால் கணவன்களுக்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே தண்டனை விதிக்கப்படுமாம். அதேநேரத்தில் தனக்கு எதிராக துன்புறுத்தல் நடைபெற்றது என்பதை பெண்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
தனது உடலில் காயம் ஏற்பட்ட இடத்தை மட்டும் நீதிபதியிடம் பெண்கள் காட்ட வேண்டும் என்று புதிய சட்டம் சொல்கிறதாம். தனது உடலில் மீதமுள்ள பகுதியை முழுவதும் ஆடையால் மறைத்துவிட்டு காயம் ஏற்பட்ட இடத்தை மட்டுமே காட்ட வேண்டும் எனவும், அந்த நேரத்தில் தனது கணவர் அல்லது ஆண் துணை ஒருவர் நீதிமன்றத்தில் உடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனுமதியின்றி மனைவி எங்கும் செல்லக்கூடாது
அதேபோல, தனது கணவரின் அனுமதி இல்லாமல் உறவினர் வீட்டிற்கு மனைவி சென்றால் அந்த பெண்ணிற்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இச்சட்டம், வன்முறையாளர்களுக்கு குறைந்த தண்டனையையும், பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து பாலின சமத்துவமின்மையை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இச்சட்டத்தின் 9 ஆம் பிரிவின்படி, ஆப்கானிஸ்தான் சமூகம் மத அறிஞர்கள் (உலமாக்கள்), உயரடுக்கு (அஷ்ரஃப்), நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் வர்க்கம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கான தண்டனை, குற்றத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்தல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவரின் சமூக அந்தஸ்தைப் பொறுத்தே இது தீர்மானிக்கப்படும்.
மனித உரிமை குழு முடிவு
புதிய சட்டம் தொடர்பாக விவாதிப்பது கூட குற்றம் என்று என்று கூறப்பட்டுள்ளதால், புதிய சட்டம் பற்றி விவாதிக்கவே மனித உரிமை குழுவை சேர்ந்தவர்களும் அஞ்சுகிறார்களாம். ஆப்கானிஸ்தானின் மனித உரிமைகள் அமைப்பான ரவாதரி (Rawadari), "குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அது நடைமுறைக்கு வராமல் தடுக்க அனைத்து சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையையும் பிற சர்வதேச அமைப்புகளையும் அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications